எங்கே
எதனின்
எதனால்
எப்பொழுதுகளில்
உன்பால் நம்பிக்கை விதை
விழுந்தது
என்பதை நானறியேன்..!
காரணங்கள் அற்று
விழுந்த விதையின்
விருட்சம் காண்கிறேன்
என்னுள்ளே...!
விழுந்த விதை
வாழ்க்கை கவிதையாய் இன்று..!
என்னை பூமியில் விதைத்த
என் தந்தையின்
அன்பும் பண்பும்
நேசமும் பாசமும்
உன்னோடு நான் காண்கிறேன்..!
இது
காதலின் செயலோ
நட்பின் நேசமா
புரியவும் இல்லை
தெரியவும் இல்லை!!
இருந்தும்
தினமும் ஏங்குகிறேன்
கடவுளிடம் வேண்டுகிறேன்...!
வரம் வேண்டும்
உன் விரல் பிடித்தே
வர வேண்டும்..!
உன்னோடு யாவும்
என் வாழ் முழுதும்
கிடைத்திட வேண்டும்..!
நீயே என் வாழ்வின்
ஆதாரம் ஆகிட வேணும்.!
No comments:
Post a Comment