அளவு கடந்து
தெளிவு
மறக்கும் நிலையிலும்
கூட அரை வேக்காடு என
அலைந்தது
கிடையாது
வார்த்தைகள்
விழைந்தது
கிடையாது..!
பள்ளி பருவத்தில் பயின்ற
பன்னிரெண்டாம்
வாய்ப்பாடு..!
அடிக்கடி
நான் சொல்லி
நீ கேட்டது உண்டு..!
என்னின்
தெளிவு
நிர்ணயிக்க
- உன்னோடு
நான் ஒப்புவித்தது
உண்டு..!
குறுக்கெழுத்து
போட்டியென
தொடர்ச்சிகள்
இல்லாமல்
நடுவில்
வினா தொடுத்து
சிறகடித்து
சிரிப்பாய்..!
உன் சிரிப்பின் போதையில்
தெளிவு
தொலைத்து
என்னை ஆசுவாசப்படுத்திக்
கொண்டு
- இயல்பு நிலை
திரும்பி
பதிலுரைப்பேன்..!
இடைப்பட்ட
நேரங்களில்
உன் நக்கல்களில்
என்னை சின்னதாய்
சீண்டி
பார்ப்பாய்..!
விடை கண்டு
அழகான ஆச்சர்யங்களில்
ஆளை மயக்குவாய்..!
மதுவின்
வீரியம் துறந்து
உணர்வேன்
வீரியம் துறந்து
உணர்வேன்
உன்னின்
வீரியம்..!
நம்மை விடுத்து
நம்மின் ஒருவர்
அறிந்த ரகசியம்..!
நம்மை விடுத்து
நம்மின் ஒருவர்
அறிந்த ரகசியம்..!
இன்று மட்டிலும்
யாரோடும்
பன்னிரெண்டாம்
வாய்ப்பாடு
ஒப்புவித்ததில்லை..!
அரை பக்கம் கிழிந்த
பன்னிரெண்டாம்
வாய்ப்பாடு
புத்தகமாய்...!
அரை பக்கம் கிழிந்த
வாழ்வோடு நான்..!
No comments:
Post a Comment