நாளும் நகந்தோடி
காதோரத்து
நரை கூட சிரிச்சுருச்சு!
ஆனமட்டும் குழந்த
மனசு தானம்மா!
அடிபட்ட மனசு
அண்டிட அஞ்சுதும்மா!
வயலோரம்
சோளக்காட்டு பொம்மை
கண்ட பறவை போல
நெருங்கிட நடுங்குதம்மா!
எட்டி நின்னு
எதார்த்தம் பழகிட
எண்ணம் உதிக்குதும்மா!
கொண்ட சூட்டில்
பட்ட பாடு பாடுறேன்மா!
தன்னிலை விளக்கம்
யாரும் தரதேவையில்லை!
ஏன்னா
யாரும் தவறில்லை
யாரின் தரம் தேயவில்லை..!
தவறும் நானே
தவறி விழுந்தேன் தானே..
வலியின் சோகம் வேகம்
தானே!!