Tuesday 28 June 2016

யாரும் தவறில்லை!!!


நாளும் நகந்தோடி 
காதோரத்து 
நரை கூட சிரிச்சுருச்சு!

ஆனமட்டும் குழந்த 
மனசு தானம்மா!
அடிபட்ட மனசு 
அண்டிட அஞ்சுதும்மா!

வயலோரம் 
சோளக்காட்டு பொம்மை 
கண்ட பறவை போல 
நெருங்கிட நடுங்குதம்மா!

எட்டி நின்னு 
எதார்த்தம் பழகிட
எண்ணம் உதிக்குதும்மா!

கொண்ட சூட்டில் 
பட்ட பாடு பாடுறேன்மா!

தன்னிலை விளக்கம்
யாரும் தரதேவையில்லை!

ஏன்னா 
யாரும் தவறில்லை
யாரின் தரம் தேயவில்லை..!

தவறும் நானே
தவறி விழுந்தேன் தானே..
வலியின் சோகம் வேகம் 
தானே!! 

என் வருகையில்..!


மொழியற்று போன
மௌனங்கள் சொல்லும்
மனதோடு கொல்லும்
பிரிவின் வேதனைகளை!

பார்க்க நீ வேண்டி
பழகிய காலங்கள்..

ஏற்க மனமின்றி
எதற்கும் துணிவின்றி
எதிர்க்கும் துணையின்றி..

மாகாணங்கள் கடந்து
இருவேறு திசையோடு
இதயம் மறந்து
போன இரு மனங்கள்!

நயமெனவே பாவனைகள்
நம்மோடு
நான் ஊரோடும்
நீ வீடோடும் ஆக..!

நாளும் உன் நலம்
அடையாளம்
நான்  காண
பெரு வண்ணம்
உன் எண்ணம்
உணர்வேன் நான்..!

தொலைத்த காதல்
தொலைவோடு நான்!
ஏதொரு
பயனோ பலனோ
இனி இல்லை
என் வருகையில்!

புதையுண்டு போகட்டும்
கல்லறை குவியல்களோடு
நம்
காதலும்
உறவும்!

Wednesday 22 June 2016

எங்கெங்கு நீ போயினும்..!



எத்தனை எத்தனை
அன்பளிப்புகளை
என்னின் நியாபகமாய்
கொணர்ந்து செல்வாய்
நீயும்..!

அத்தனைகளையும்
அப்புறப்படுத்திடு!!
எங்கெங்கு நீ போயினும்
என் முகமே மறந்த போதினும்

என்றேனும் மறவாது
கண்ணில் உனை ஏந்தி
நான் வழங்கிய
முதல் முத்தம்..

வாழ்வில் நீ வாங்கிய
முதல் முத்தம்!

கேளா யாசகம்...!


கேளா யாசகம் 
நானும் கொண்டு 
கொண்டேன் பெருந்துயரம் 
என்னோடு...! 

என்பால் சோகம் யாவும் 
பெண்பால் பாசம் கொண்டு 
என்பாள்  அவள்! 

அவளோடு நான் கண்ட
காதல் மாளிகை 
இன்று கனவு நாழிகைகளாய்..!

ஆண்பால் நானோ
அன்பால் இன்று  
அஃறிணை ஆகும் 
நாள் நோக்கி 
நிறைவு பயணம் 
நிறைவேறா ஆசைகளோடு..!

Tuesday 21 June 2016

பாதரச கரைசல்..!


என் செய்வேன் நானும்
நம் காதல் மறவா
என் வீட்டு
நிலைக்கண்ணாடியை..

இன்று மட்டிலும்
என் முகம் காட்ட மறந்து!

ஒன்றெனவே  இருவரும்
இணைந்து
பொருத்தம் பார்த்து மகிழ்ந்த
நொடிகள் காட்டும்..!

நம் காதல் மறவா
என் வீட்டு நிலைக்கண்ணாடியை
என் செய்வேன் நானும்!!

பாதரச கரைசலில்
அதனின் கண்ணீர்
காண்கிறேன்
நம் முகங்கள் காணாது!

Monday 20 June 2016

ஆசைகள்!!


சின்ன சின்னதாய் 
நிறைய ஆசைகள் 
என்னோடு..! 

எல்லா ஆசைகளும் 
உன்னோடு மட்டுமே
என்பதால் 

அதனின் சந்தோஷம் 
மட்டும் பெரியது!!!

Thursday 16 June 2016

இனி நாம்...!


பக்கத்தில் தூரமாக
நெஞ்சோடு பாரமாக
இத்தனை நாளாய் நீ!

தூரத்தில் நான் உனது
எனதான வாஞ்சையில்
பேருருபம் கொண்டது
உன் மீதான என் பிரியும் !

எனதாகும் நாளின்
நீளம் அளக்கிறேன்!

அன்பின் பகிர்வில்
மகிழ்வோம் என்றென்றும்
இனி நாம்!

இதுவும் கடவுளின் செயல் தானோ!


உன் தோள் சாய்ந்திட
உயிர் தேடுது
என் மனம்!!
பாசம் வேண்டி
நடுங்குது என் உயிர்!

கொஞ்சம் உன்னை
கடன் வாங்கி

நானும் தான்
உன் மடி தூங்கனும்
கண்ணீர் கடல்
கரை தெரியும் தூரம் வரை
நானும் தான் அழுதிடனும்
சோகம் கரையனும்..

உன் பிரிவின் சோகம்
மட்டும் கொண்டு
பிரியனும்!

பாலுக்கு அழும்
பச்சிளம் குழந்தையென
யாருமற்ற அனாதையாய்
நானும் தான் ஆனேனோ
இதுவும் கடவுளின் செயல் தானோ!!

Tuesday 14 June 2016

பட்டாம்பூச்சி சிறகுகள்..!


சொல்லாத மன 
ஆசைகள் 
உன் செயலோடு
நான் காண!

நேற்றைய சோகங்கள் 
மறந்த, மறைந்த 
பட்டாம்பூச்சி சிறகுகள் 
நம் மனதோடு!

சிரிப்புகளுக்கு சற்று
இடையே சிறிய வேளையில்  
சிறிதே நாம் பேசினோம்!!

ஆயினும் 
அதுவே ஆகபெரும் 
சிறந்த சந்திப்பு
இன்று மட்டிலும் - மனதோடு!

கவிதை - கைவந்த கலை தான்!
ஆயினும் ஆனந்த உச்சத்தில் 
உதறல்கள் என்னோடு.. 

கட்டு குழையாமல் 
வந்திருப்பதாய் மகிழ்கிறேன்
சந்திப்பின் நினைவுகளோடு!

நின்றுசிரிக்கும் நிஜம்!!


முகமூடிகள் ஏதுமின்றி
வாழ்ந்திடத்தான்
நானும் விரும்பினேன்!

கொத்தி தின்னும்
சர்ப்பமொத்த கண்களின்
வீரிய விஷத்தினில்
நானும் தான் செயலிலந்தேன்!

அன்று உன்னோடு
கூடி நின்று
நாம் சிரித்த நிகழ்வுகள்
நினைக்கையில்

இமைகளின் படபடப்பில்
சட்டென கண் முன் வந்து
நின்றுசிரிக்கும்
இன்றைய நிஜம்!

கொன்று தின்னட்டும்
என்னின் மிச்சத்தையும் -
என் இயலாமை!

போதும் இந்த முகமூடி வாழ்வு
உனை தொலைத்த என்
முகமூடி வாழ்வு!!

Monday 13 June 2016

தொடரி..!


தொடரி நீயாக
தொடர்வேன் நானும்
மேகமேனவே.

உயிர் தொடும்
உறவேனவே நீயும் வந்தாய்
நல்வினை யாவும்
நலம்பெற தந்தாய்
உயிர் தேடும் பதரெனவெ
நலம் கெட விட்டாய்!

உன் தேகம் தொடர்வேன்
மேகமேனவே!
சத்தமிடும் என் வார்த்தைகள்
உன் செவி சேராதே!

உயிர் களைப்புறும் பொழுதுகளில்
களிப்பூட்டும் உன் சிரிப்புகளோடு
தொடர்வேன் நானும்
தொடரி நீயாக!

பொருள் தரும்..!


உன் வார்த்தைகளின் வீரியம்
நம்பிக்கை விதைகள்
தூவிய மழைக்காலம்

நிஜங்கள் உணர்த்தும்
தினம் தினம்
நீயும் நானும் தூரங்கள்
என்பதை!

உன்  நாளேடுகளில்
என் தலையீடுகள்
இல்லையெனில்

பொருள் தரும் வாழ்வு
தேடிய உன் வாழ்வோடு
இனி நான் இல்லை
என்றே பொருள் தரும்!

Friday 10 June 2016

சிறைப்பறவை!!

கூண்டுக்கிளி நீயோ
சிறகு விரித்து பறக்கிறாய்
தாய் வீடு வாசல்!

சிறை வாசம் முடிந்து
பிழையென வாழ்ந்த
வாழ்வுதனை விடுத்து!

இல்லை உனக்கு
இனி தடைகள்
இலக்கு  அடைய!

வாழ்த்துகிறேன் பிரிவின்
அழுகையோடு - காதல்
சிறைப்பறவை நான்!

தனிமை பொழுதுகளில்!!


மனம் விட்டு உயிர் தொட்டு 
பேச துணை அற்ற
என் தனிமை பொழுதுகளில் 
புரிகிறது - 
உன் 
அன்பின்  அருமையும் 
பிரிவின்  கொடுமையும்!!

இது போதுமா உனக்கு!!


மனமே என் மனமே உடையாதிரு..
உயிரே என் உயிரே உறையாதிறு..
உறவே இவ்வுறவே உதிராதிரு...!

உருட்டி மிரட்டி
உயிர் ஒன்றென திரட்டி
உன் கருவிழியோடு எரிகிறேன்!
காண கரைகிறேன்
உன் கண் மறைகிறேன்..!

இது போதுமா உனக்கு -
என நீ கெஞ்சுவதாக..!
போதுமா இது உனக்கு- என
மனம் என்னை நகைப்பதாக..!
ஒற்றை வாக்கியம்
செருக்குடன் சுழல்கிறது
செவிகளோடு!!

தலை இலை வாழையில்
தெளித்திடும் நீரென..
விழியோரத்து நீர் என்
உதடுகளில் உருண்டோடுகிறது
உதிரமனவே!!

புன்னகையில் கண்ணீர்
புதைத்து பிரிந்து வருகிறேன்!!

நடைதூர பயணம்...
நகர்வதாய் சொல்லும் என் கால்கள்
நகராமல் நீளும் பாதைகள்
முன்னோக்கி நான் நகர
பின்னோக்கி இழுக்கிறது -
நம் நினைவுகள்!!

விழி பார்க்க விரும்பிய வேளையில்..
மதி பேச்சில் தோற்று
தொடர்கிறேன் என் திசையில்
வெண்மதி உனை பிரிகிறேன்!!

Wednesday 1 June 2016

அறிவேன் நானும்!!


வாழ்வின் வெகுதூரம் கடந்து
என் இறுதி காலங்கள் 
நானும் வந்து விட்டதாய் 
உணரும் பொழுதுகளில்.. 

என் பதிப்புகளோடு 
நிதம் புளங்காகிதம் கொண்டு 
நாட்கள் நகர்த்தும் 
காதல் பேதை தானே நானும்! 

அறிவேன் நானும் தானே! 
என் எல்லா பதிப்புக்களுக்கும் 
தவறாமல் தினமும் 
உன் பதிவுகள் 
என்னோடு வருவதை!