நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
நீ வளர்த்த உன் காதல்
தேய்பிறையென...
நீ வளர்த்த என் காதல்
முழு நிலவென
வளர காண்கிறேன்...!
என்ன ஆகும் நீ வளர்த்த
நம் காதல்..!
தாய்மை உணர்கிறேன்!!!
உன்னால் - என்னுள்
உதித்த காதல்
இதயத்தில் கருவாக..!
என் இதய துடிப்போடு
நம் காதல் கருவின்
துடிப்பும் கேட்கிறேன்..
தாய்மை அறிகிறேன்!
பொத்தி போற்றி நம்
சிசு வளர்க்கிறேன்!!
காரணமாய் அச்சம் கொள்கிறேன்!
காதல் சிசு
கண்ணில் காண்போமா
இல்லை நம்
காதல் குழந்தையின்
கருவறுப்பாயோ..?
No comments:
Post a Comment