Friday 27 January 2017

சிறைச்சாலை கம்பிகள்..!


சதுரங்க ஆட்டத்தின்
சாதுர்ய வாய்மொழி கேட்டு
சாமர்த்தியம் கெட்டு..!

சிப்பாய் நானோ...
கையூட்டு மட்டுமின்றி
வாயூட்டு பூட்டோடும்...!

அடிகள் முன்னெடுத்து
வைக்கிறேன்- விழப்போகும்
அடிகள் அறியாமல்..!

தனியொரு சிப்பாய் என
கடைசி கட்டம்
நோக்கி நகர்த்துகிறாய்..
ராணியை மீட்டெடுக்க..!

சகுனி நீயோ...?
தருமன் நானோ..?
பகடை உருட்டினாய்
பாடையில் ஏற்றினாய்..!

சக்கரவியூகம் கொண்டு
போற்றி தேற்றி
நாண் ஏற்றிய
வில்லேற்றி அனுப்புகிறாய்..!

வகுத்த வியூகங்கள்...
வளைத்த வில்லோடு
சென்ற அம்புகள்  யாவும்
வில்லாளினியிடம் வீணற்று
ஆகிட-  கழு ஏற்றிடுவாய்
என்று எக்கணம் நீ அறிவாய்..!

பாதங்களில் பூக்கள் படர..
பாதைகளில் பூக்கள் தூவினாய்..!
பாடைகளில் விழுமென,
பாடை தூக்கியின்
பாதம் விழுமென...
எங்கனம் நீ அறிவாய்..!

சிறைச்சாலை கம்பிகள்
விடுதலை அறியாது..!

கல்லறை செல்லும்
பூக்களின் வாசம்
நுகரப்படாது..!

யாரும் நுகராமல்
வாசம் அறியாமல்
கல்லறை பூவென
ஆனேனோ..!!

Thursday 5 January 2017

காதல் கரகாட்டம் ..!



ஏன் தோன போகுது?
என் துணை போகுது..!

கயித்து மேல ஏறி நின்னு
காதல் கரகாட்டம் ஆடுது..!

மதில் மேல் பூனையோ
தரையிறங்க மறுக்குது...!

நேரம் நெருங்க நெருங்க
நெஞ்சம் நொறுங்குது..!

மனசுக்குள்ள பூனை சத்தம்
பலவாறா கேக்குது..!

தொண்டை குழி அடைக்க..!
வழியற்று போன
வார்த்தைகள்
விழி பிதுங்கி நிற்க..!

பேச வேண்டிய
மொத்த வார்த்தைகளையும்
விழிகளோ கண்ணீர் திரள்களாய்
கொட்டி காட்டிட..!!

என் மௌனங்களையும்
சிரிப்புகளையும்
படித்துணர்ந்த உனக்கு
அழுகைகள் புரியலையா..!

அன்பிற்கு அழும்
என் அழுகைகள்
அறிந்திடவில்லையோ...!

தரை இறங்கிடா பூனை
தகராறு பண்ணுது..!
தனித்துவம் காட்டுது..!

மதில் மேல் பூனை
இன்று
மதி கெட்ட பூனையாய்..!

இதய மேடை...!


என் நாமம் கொள்வேன் நான்?
என் நாமம் கொண்டேன் நான்?

கதைகள் கதைத்திட
யாவும் பகிர்ந்திட
கதை சொல்லி நானோ?

நம்பிக்கை தந்திட
சொல்லி திருத்திட
தோழன் நானோ?

உணர்வுகள் புரிந்திட
உயிரென்று எண்ணிட
யார் நானோ?

இதய மேடையில்
காதலின் நிகராய்
எதை நிறுத்தினும்
துலாபாரம் தோற்றே
போக கண்டேன்..!

என் தன்மானமே தோற்க்கையில்
காதலும் எடை குறைந்து
தோற்க காண்கிறேன்..!

எள்ளி நகையாடிட
தள்ளி பகைமூடிட
யாசகங்கள் கேட்கும்முன்
யோசனைகள் நூறாயிரம்..!

ஏதேதோ இழந்த போதிலும்
தன்மானம் தொலைத்திடாத
என் தோள்கள்..!

தொலைத்திடாத தன்மானம்
வரட்டும் என்னோடு!!

தள்ளி இருத்தல் நல்லது..!
தன்மானம் கருத்தில்
கொண்டு
காதலை விட்டு
தள்ளி இருத்தல் நன்று..!

பன்னிரெண்டாம் வாய்ப்பாடு..!

அளவு கடந்து
தெளிவு மறக்கும் நிலையிலும்
கூட அரை வேக்காடு என
அலைந்தது கிடையாது
வார்த்தைகள் விழைந்தது
கிடையாது..!

பள்ளி பருவத்தில் பயின்ற
பன்னிரெண்டாம் வாய்ப்பாடு..!
அடிக்கடி நான் சொல்லி
நீ கேட்டது உண்டு..!

என்னின் தெளிவு
நிர்ணயிக்க - உன்னோடு
நான் ஒப்புவித்தது
உண்டு..!

குறுக்கெழுத்து போட்டியென
தொடர்ச்சிகள் இல்லாமல்
நடுவில் வினா தொடுத்து
சிறகடித்து சிரிப்பாய்..!

உன் சிரிப்பின் போதையில்
தெளிவு தொலைத்து
என்னை ஆசுவாசப்படுத்திக்
கொண்டு - இயல்பு நிலை
திரும்பி பதிலுரைப்பேன்..!

இடைப்பட்ட நேரங்களில்
உன் நக்கல்களில்
என்னை சின்னதாய்
சீண்டி பார்ப்பாய்..!

விடை கண்டு
அழகான ஆச்சர்யங்களில்
ஆளை மயக்குவாய்..!
மதுவின்
வீரியம் துறந்து
உணர்வேன்
உன்னின் வீரியம்..!

நம்மை விடுத்து
நம்மின் ஒருவர்
அறிந்த ரகசியம்..!

இன்று மட்டிலும்
யாரோடும்
பன்னிரெண்டாம் வாய்ப்பாடு
ஒப்புவித்ததில்லை..!

அரை பக்கம் கிழிந்த
பன்னிரெண்டாம்
வாய்ப்பாடு புத்தகமாய்...!
அரை பக்கம் கிழிந்த
வாழ்வோடு நான்..!