வெகு நாள் சென்று
நெஞ்சோடு பாரம்
ஏறி நிற்க..!
துக்கம் அடைத்த தொண்டையில்
வார்த்தைகள்
வழி தேடி அலைய..!
கண்ணீர் அடைத்த விழிகளில்
காட்சிகள் முற்றிலும் களைய..!
சுத்த காற்று தேடி
சுவாசப்பை துடிக்க..
உள்ளூர ரசித்தாய்..!
கண்கள் பணித்து
உடனே அழுதாய்..!
எல்லை மீறிய என்
செய்கையில்
வில்லென கேள்விக்குறியாய்
எதற்கு என்பதனவே
வளையும் உன்னின்
புருவங்கள் உயர்த்தி
அம்பெய்திடும் முன்
முடிவுரை மொழிகிறேன்...!
No comments:
Post a Comment