Thursday 24 November 2016

காதலுடன் நான்..!


மறக்க வேண்டிய நினைவுகள்..!

சுற்றி ஓர்
வட்டம் வரைந்து
சுற்றம் உணராது..!

நினைத்து நினைத்து
கண்ணீர் வடித்து
வறண்டு போன கண்களோடு..!

வலிகளை வார்த்தைகளில்
வடித்து - கொஞ்சம் கொஞ்சமாய்
விஷம் வெளியேற்றுகிறேன்..!
நினைவுகள் மறக்கிறேன்..!
நிஜங்கள் ஏற்கிறேன் ..!!

உதாசீனங்கள் உணர்த்திய உறவுகள்..!
சோகமோ, கோபமோ
வலியின் வேகமோ,
இயலாமையோ..
ஏதோ ஒன்றாய்..
என் விரல்களை
உதறி தள்ளிய உறவுகள்...!

எண்ணி பார்க்கையில்
யாதும் தொலைத்து
ஏதுமற்று தனித்திருக்க
வந்த பயணம் தான் இது..!

இன்று எண்ணிக்கையில்
நூறாய்
என் நினைவுகள்
இந்த பயணத்தில்..!

எழுதிய நாட்குறிப்பு
தொலைந்து போகக்கூடும்..!
என் நாட்குறிப்புகள் கூறும்
இவ்வலைத்தளமும்
உள்ளிருக்கும்
வேதனை வரிகளும்..!

தலைப்புகள் மட்டுமே
வேறுபடும் - பதிவாகியிருக்கும்
ஒவ்வொரு
கவிதைகளுக்கும்..!

அதனின் நிஜங்களும்
நினைவுகளும்
எளிதில்
புரிந்து கொள்பவை அல்ல..!!
கடந்து செல்பவை அல்ல..!!

கவலைகள் மறக்க வைத்த
என்னோடு உடன் இருந்த
சில நல்உள்ளங்கள்!!
வாழ்வில் எப்பொழுதும்
என் விரல் பிடித்து
உடனிருப்பதாய் உணர
வைத்திட்ட இதயங்கள்..!

பதிவுகளை பார்வையிடும்
அனைவர்க்கும்
உளமார்ந்த நன்றிகள்..!!

காதலுடன்..
இரா.செந்தில்குமார்.

No comments:

Post a Comment