Wednesday 30 November 2016

தீரா காதல்..!


எக்காரணம் கொண்டு
இங்கு வந்தேன்..!
காதல் காரணியாய்
செயல்பட...

செயலற்று போன நான்
கடல் கடந்தேன்...
காதல் கடக்க முடியாமல்..!

காதலின் மீதமாய்..
கடைசியாக நீ
வீடு வந்த பொழுதில்..

என்னோடும்
என் வீடோடும்
சிதறவிட்டு சென்ற
வெட்கங்கங்களையும்
காதலையும்
உன் கடைசி கண்ணீரையும்
சேகரித்து உடன் கொண்டு வந்தேன்..!

கசையடி தந்து
காதல் விசை
திசை மாற்றி ஒரு பயணம்..!

ஏகாரமாக உனை சொல்லினும்
ஓகாரமாக நானும் சேர்கிறேன்..!

மிரட்டும் காதல்..
துரத்தும் நினைவு..
அரட்டும் விதி..
உள்ளடங்கி போகும் நான்..!

என்று தணியும் என்
தீரா காதல் பசி..!

அள்ளி பருகி வாழ் ரசித்திடும்
முன் ஓடி போனது ஏனோ..?
அடங்கி போகையிலே
அதிர்ந்து பேசுவது ஏனோ??

சொல்வேதல்லம் கேட்ட நொடிகள்
மாறிய தருணம் எதுவோ?

அடங்கி போய்விடாதோ
என் காதல் பசி
இத்தனை அடிபட்டும்..!
இன்னும் ஏன் பசி
ஏக்கம் என்னோடு..!

என்று தணியும் என்
தீரா காதல் பசி..!
மிகைப்படுத்தல் ஆயினும்
நிஜம்
நீ மட்டும் தான்..!

No comments:

Post a Comment