Wednesday 16 November 2016

தனியென சிதறுகிறேன்....!!!




வார்த்தைகளின் வாஞ்சைகளில்
கண்ணொளி காண கண்டேன்..!
காணாமல் போனேன்.!!
உன் செயல்கள்
கண்டு செயலிழந்தேன்..!

ஏமாற்றம் தரும்
மாற்றம் வந்த காரணம்
என்னவோ..?

வேண்டும் என்னும் எண்ணம்
வேண்டாம் என மாறும் வண்ணம்
தோன்ற காரணம் என்னவோ?

மனிதி கொஞ்சம் எட்டி பார்க்காதோ
மனப்பிணி தீராதோ..!

என் கனவுகளில்
ஜோடியோடு அலைகிறேன்..!
குடும்பமோடு குழைகிறேன்..!
குழந்தையோடு தவழ்கிறேன்..!
நிஜங்களில் ஏதுமின்றி
தனியென சிதறுகிறேன்....

அகம் திறந்து அன்புரைப்பாயா..?
மனிதி கொஞ்சம் எட்டி பார்க்காதோ..?
மனப்பிணி தீராதோ..?
என் தனிப்பிணி இன்றோடு முடியாதோ..?

No comments:

Post a Comment