Wednesday 23 December 2015
Thursday 13 August 2015
சலாம் கலாம்!!
குடும்ப சூழல் காரணமாய்
உன் சிறு வயதில் வீடு தோறும்
சென்று தினசரி நாளிதழ் விநியோகம் செய்தாய் நீ
இன்று அணைத்து நாளிதழ்களும்
உனை பற்றிய செய்திகளால்
தங்களை விநியோகம் செய்து கொள்கின்றது
இருந்தும் நீ எளிமையின் உருவமாய்!
சிறு வயதில் கனவுச்சிறகுகள் மூலம்
வானவீதியில் உலாவந்த நீ
சிறகுகள் இல்லாவிட்டால் என்ன…
நானும் ஒருநாள் வானத்து உச்சியை எட்டுவேன்
என முடிவும் கொண்டு
இன்று ஏவுகணைகள் மூலம்
நாட்டிற்கு பெருமையும் நற்பெயரையும் ஈட்டி
நீயும் பல புகழ் உச்சியும் எட்டி
ஆயினும் தன்னடக்கத்தோடு நீ
ஏவுகணையின் சாதனைகள் தந்த
சந்தோசத்தை விட
சாதனையின் இடையில் ஊனமுற்றோருக்கு
எடை குறைந்த கருவி வடிவமைத்த
உன் அன்பிற்கும் பண்பிற்கும் நீயே இணை
உங்கள் இழப்பில் உலக அறிவியல்
ஓய்ந்தது என்று நாங்கள்
ஓய்ந்துவிடப்போவதில்லை!
நம் இந்திய இளைஞர்கள் அனைவரின்
இதயத்தில்
நீங்களும் உங்கள் கனவுகளும் விதைக்க பட்டுள்ளது
சமுதாய மாற்றம் தரும் பல கனவுகள் காண
சொன்ன உங்களின் கனவு நினைவாகும் வரை
எங்களுக்கு இனி விடியல் இல்லை
உன் கனவிற்கு முடிவென்பது இல்லை
எங்கள் தலைவனே!
-இவன்
நீவிர் விரும்பிய இளைய தலைமுறையின் ஒரு பிரதிநிதி!!
Wednesday 12 August 2015
Tuesday 11 August 2015
Friday 7 August 2015
Thursday 6 August 2015
Monday 3 August 2015
Wednesday 29 July 2015
Tuesday 28 July 2015
தனிமை பாதையில்...
நடை பழகி தந்தேன்.
நல்ல உடை பழகி தந்தேன்..
நாம் விடை பெரும் நாள்
விரைந்து வருகின்றது.!
இனி எனது இந்த தனிமை
நடை பயணத்தில்
ஒரு போதும் எந்த ஒரு உயிர்க்கும்
கரம் கொடுத்து தூக்கி விட மாட்டேன் ..
கணம் தாங்காமல் அல்ல...
விடை பெரும் தருணத்தில்
உன் விரல் ஸ்பரிசம் தரும்
அந்த கடைசி சில நிமிட வலி தாங்க முடியாமல் ..
என் தனிமை பாதையில்
உன் கீதம் பாடி செல்கின்றேன் நான்...
Monday 27 July 2015
Tuesday 3 March 2015
இனி நான் இல்லை-யாராகவும்!!!
இன்னும் என்னை காயபடுத்தி
கொண்டு தான் இருக்கிறது
உன்னை காயப்படுத்திய நாட்கள்
விலகியே நிற்கிறேன்
உன் வாழ்வில் இருந்து
இனியும் உன்னை
வருத்த விரும்பாமல்.
ஒரு போதும்
இனி கிடைக்கபோவதில்லை
நீயும்
அந்த அழகிய பொழுதுகளும்
இனி யோசித்தும்
உன்னிடம் யாசித்தும்
யாதொரு பயனும் இல்லை.
யாரோ ஒருவனாய்
வருவதை விட
உன்னுடைய
இந்த பயணத்தில்
இனி நான் இல்லை-யாராகவும்..!
Wednesday 18 February 2015
நினைவுகள்!!!
அன்பு உணர்த்திய உன் கண்கள்..
தொட்டும் விடாமல் விட்டும் விலகாமல்
இணைந்தே சென்ற நம் பாத சுவடுகள்..
கூச்சம் போக்கிய உன் குளிர் புன்னகை..
ஏக்கம் உணர்ந்த உன் விடுமுறை பிரிவு..
பரஸ்பரம் நலம் விசாரித்த நம் விரல்கள்..
சோகங்கள் பகிர்ந்த உன் தோள்கள்..
இவை அனைத்துமாகி இருந்த நான்!
இவையேதும் இன்றி
இன்று தனித்து பயணிக்கிறேன்
நினைவுகளின் உதவியோடு!!!
Tuesday 13 January 2015
Subscribe to:
Posts (Atom)