Wednesday 23 December 2015

வருங்காலம் கணித்து சொல்கிறேன்!


என் சொற் யாவும் பொய்யெனவே
தெரியும் - மெய்யென நீயும்
அறியும் ஓர் நாளும்
வருமே!

மெய்ஞானம் காணும் அந்நாளில்
என் புலன்கள் எவற்றிற்கும்
உன் அழுகுரல் புலப்படாது!

அந்நாளும் இனி எந்நாளும்
இந்நாள் போல்
வாய்ப்பொன்று வரப்போவதில்லை
தரப்போவதில்லை!

வருங்காலம் கணித்து சொல்கிறேன்!  

Thursday 13 August 2015

சலாம் கலாம்!!


குடும்ப சூழல் காரணமாய்
உன் சிறு வயதில் வீடு தோறும்
சென்று தினசரி நாளிதழ் விநியோகம் செய்தாய் நீ

இன்று அணைத்து நாளிதழ்களும்
உனை பற்றிய செய்திகளால்
தங்களை விநியோகம் செய்து கொள்கின்றது
இருந்தும் நீ எளிமையின் உருவமாய்!

சிறு வயதில் கனவுச்சிறகுகள் மூலம்
வானவீதியில் உலாவந்த நீ
சிறகுகள் இல்லாவிட்டால் என்ன…
நானும் ஒருநாள் வானத்து உச்சியை எட்டுவேன்
என முடிவும் கொண்டு


இன்று ஏவுகணைகள் மூலம்
நாட்டிற்கு பெருமையும் நற்பெயரையும் ஈட்டி
நீயும் பல புகழ் உச்சியும் எட்டி
ஆயினும் தன்னடக்கத்தோடு நீ

ஏவுகணையின் சாதனைகள் தந்த
சந்தோசத்தை விட
சாதனையின் இடையில் ஊனமுற்றோருக்கு
எடை குறைந்த கருவி வடிவமைத்த
உன் அன்பிற்கும் பண்பிற்கும் நீயே இணை

உங்கள் இழப்பில் உலக அறிவியல்
ஓய்ந்தது என்று நாங்கள்
ஓய்ந்துவிடப்போவதில்லை!

நம் இந்திய இளைஞர்கள் அனைவரின்
இதயத்தில்
நீங்களும் உங்கள் கனவுகளும் விதைக்க பட்டுள்ளது

சமுதாய மாற்றம் தரும் பல கனவுகள் காண
சொன்ன உங்களின் கனவு நினைவாகும் வரை
எங்களுக்கு இனி விடியல் இல்லை

உன் கனவிற்கு முடிவென்பது இல்லை
எங்கள் தலைவனே!

-இவன்
நீவிர் விரும்பிய இளைய தலைமுறையின் ஒரு பிரதிநிதி!! 

Wednesday 12 August 2015

யாவருக்கும் நலம்!


தொட்டு விட முடியாது என் புரியும் வேளையில்
எட்டி பிடிக்க முயற்சிக்காமல்
செவ்வனே விட்டு விலகி
செல்வது யாவருக்கும் தரும் நலம். 

உன் காலடியில்



நாம் பிரியும் ஒரு நன்னாளில்
யாதுமாகவும் நான் இருக்க..
என்றொரு வரம் வேண்டி நீ நிற்க!

யாதுமாக வருவதை விட உன்
கணவனாய் வருகிறேன்
என்று என் மனம்
நான் உரைக்க!
மௌனம் உதிர்க்கிறாய் உன் பதிலாய்..

அந்நொடியில் உதிர்ந்து போகின்றது
என் வாழ்கை
உன் காலடியில்.... 

Tuesday 11 August 2015

தொலைந்து போகின்றேன்



உன் வாழ்கை மாற்றங்கள் 
எனக்குள் வலிகள் பல தந்தாலும்,

உன் வார்த்தையின் தேற்றல்களில் 

சமாதானம் ஆகின்றேன்.. 

உன் வார்த்தையில் மாற்றங்கள் 

காணக்கண்டால், 

உன் வாழ்கையில் நான் 

தொலைந்து போகின்றேன்...  

மீழும் வ(ழி)லி..


உன்னிடம் என் காதல் 
சொல்ல வந்த போது 
மீண்டும் காதலா என்று என்னுள் 
தோன்றாமல் இல்லை.

இல்லை இதுவும் என்று அறிந்த 
அந்த ஒரு நிமிடம் 

மீண்டும் நான் மீண்டு வர வேண்டும் 
இந்த வலியில் இருந்து
என்று என்னுள் 
தோன்றாமல் இல்லை.

மீழும் வழி மட்டும் தோணவில்லை!

ஒரு நாள் ஒரு போதும்!!



உள்ளம் முழுதும் உன்னிடம் வசமாக 
நான் என்ற சொல்லின் அர்த்தம் மறந்து 
நீயாகி பல நாள் ஆயிற்று.. 

இனி ஒரு நாள் ஒரு போதும் இப்பொழுது 
மீண்டும் வாராது
நம் இருவருக்கும்...
நீயும் நானும் நாமாய் ஆக 
ஏற்ற ஒரு தருணம்!!

ஆகவே உன்னிடம் நான் யாசிக்கிறேன் 
நம் வாழ்கையை!! 

Friday 7 August 2015

மாற்றம்!!



மத மாற்றம் கூட தண்டனைக்குரியது அல்ல 
காதல் கொண்ட பின் 
சற்றென்று மாறும் இந்த நவ நாகரிக
பெண்களின் மனமாற்றம் தான் 
நிச்சயமான தண்டனைக்குரியது!! 

Thursday 6 August 2015

ஒருபோதும்..



அவ்வளவு எளிதில் 
இனி  யாருடைய அன்பிற்கும் 
அடிமையாவதும் இல்லை 
ஆட்கொள்ளப்படுவதும் இல்லை.

பெரும் பொய்!!!




நித்தமும் என் நினைவில் 
நீயே இருப்பதினால்
உன்னை பற்றி சிந்திப்பதாய் 
நான் சொல்வது - ஆக 
பெரும் பொய்!!

இயலாமையின் சாட்சி!



முன்பின் அறியா, முழுவிவரம் தெரியா 
முகம் தெரியா, குணமும் தெரியா 
ஒருவன் இனி உன் மணவாளன்..

அவனோடு தினம் வாழும் 
உன் மனம்  
இன்றில் இருந்து -என்று அறிந்து 
நான் படும் வேதனை..

உன்னோடு, 
ஏன் யாரோடும் 
நான் சொல்ல இயலாது..

எனது இயலாமையின் மிச்சத்தின் 
சாட்சி நீ மட்டுமே...

சேவை!!


நீ திருப்தி அடையாமல் 
திருப்பி அனுப்பிய 
என் காதல் - இன்றோடு 
தன் சேவையை நிறுத்தி கொள்கின்றது!.

Monday 3 August 2015

உன்னுள்ளே.


மறந்தும் மருந்திற்கு கூட 
இனி பெண் வாசம் நுகரமாட்டேன்...
விரும்பும் மனதை  
கட்டி கொள்ளவும் முடியாமல் 
விட்டு தரவும் முடியாமல் 
உன்னையும் நோகடித்து 
நானும் கொஞ்சம் கொஞ்சமாய் 
நொறுங்கி போகின்றேன் உன்னுள்ளே. 

இருள் காலம்!




என் வாழ்கையில் 
நான் தடுமாறி தடம்மாறிய 
இருள் காலங்களில்- சிறு 
மெழுகுவர்த்தி ஏற்றாத யாரும் 
என் இறுதி சடங்கிற்கு தீப்பந்தம்
ஏந்த தேவை இல்லை!!!!!!.

Wednesday 29 July 2015

என் கதை!!


யார் இன்றி நான் இல்லை என்று 
உணர்கின்ற ஒரு தருணம்..
அவளை மனம் முடிப்பேன்.
இல்லை அன்றோடு என் கதை முடிப்பேன்.

Tuesday 28 July 2015

தனிமை பாதையில்...


நடை பழகி தந்தேன். 
நல்ல உடை பழகி தந்தேன்..
நாம் விடை பெரும் நாள்  
விரைந்து வருகின்றது.!

இனி எனது இந்த தனிமை 
நடை பயணத்தில் 
ஒரு போதும் எந்த ஒரு உயிர்க்கும் 
கரம் கொடுத்து தூக்கி விட மாட்டேன் ..
கணம் தாங்காமல் அல்ல... 

விடை பெரும் தருணத்தில் 
உன் விரல் ஸ்பரிசம் தரும் 
அந்த கடைசி சில நிமிட வலி தாங்க முடியாமல் ..

என் தனிமை பாதையில் 
உன் கீதம் பாடி செல்கின்றேன் நான்...

சிறை!



என் மனம் படும் வேதனைகளை  
எம்மொழி கொண்டு கவிதை அரங்கேற்றுவேன்!

என் விழி முதல் மொழி வரை 
சிறைப்பட்டு இருக்க...

உன் காதல் இதயத்தில்.. 

Monday 27 July 2015

பிரியும் நாள் தொடங்கியது..




தனிமையில் உன்னை நினைத்து.. 
தாய் பாலுக்கு அழும் பச்சிளம் குழந்தையென 
அழுவேன்  என ஒரு போதும் 
சிந்தித்ததே இல்லை!!.. 

உன் பாசத்தின் வீரியம் புரியும் தருணம் 
நீ என்னை விட்டு பிரியும் நாள் 
தொடங்கியது..  

எமனுக்கு ஒரு கடிதம்



உன்  திருமண செய்தி அறிந்த நாள் முதல் 
என் மரண செய்தி கேட்டு கடிதம்  அனுப்புகின்றேன் 
தினமும் எமனுக்கு 
கையில் மதுகோப்பை ஏந்திய வண்ணம் !.. 

Tuesday 3 March 2015

இனி நான் இல்லை-யாராகவும்!!!






இன்னும் என்னை  காயபடுத்தி 
கொண்டு  தான் இருக்கிறது   
உன்னை காயப்படுத்திய நாட்கள் 

விலகியே நிற்கிறேன் 
உன்  வாழ்வில் இருந்து  
இனியும்  உன்னை  
வருத்த  விரும்பாமல்.

ஒரு போதும் 
இனி கிடைக்கபோவதில்லை 
நீயும் 
அந்த அழகிய  பொழுதுகளும் 

இனி யோசித்தும் 
உன்னிடம் யாசித்தும் 
யாதொரு பயனும் இல்லை.

யாரோ ஒருவனாய் 
வருவதை விட
உன்னுடைய 
இந்த பயணத்தில் 
இனி நான் இல்லை-யாராகவும்..!



Wednesday 18 February 2015

நினைவுகள்!!!




அன்பு உணர்த்திய உன் கண்கள்..
தொட்டும் விடாமல் விட்டும் விலகாமல்
இணைந்தே சென்ற நம் பாத சுவடுகள்..
கூச்சம் போக்கிய உன் குளிர் புன்னகை..
ஏக்கம் உணர்ந்த உன் விடுமுறை  பிரிவு..
பரஸ்பரம் நலம் விசாரித்த நம்  விரல்கள்..
சோகங்கள்  பகிர்ந்த உன் தோள்கள்..
இவை அனைத்துமாகி இருந்த  நான்!
இவையேதும் இன்றி 
இன்று தனித்து பயணிக்கிறேன் 
நினைவுகளின் உதவியோடு!!!

காதலர் தினம்!!




                                    உன்னால் அனாதையாக்கப்பட்ட 
                                    நானும் நம் காதலும் 
                                    காத்திருக்கிறோம்  காதலுடன்!
                                    உன்  காதலுக்காக...  

                                                                                    -இப்படிக்கு  
                                                                                       நம்  காதல்... 

Tuesday 13 January 2015

உன் புன்னகை..


ஆயிரம்  நகைகள் அணிந்து
அழகாய்  நீ  நடந்து  வந்தாலும்
உனது புன்னகைக்கு ஈடாய்
எதுவும்  மின்னவில்லையடி

Monday 12 January 2015

காதல் கைகள்..




எனக்கு  உன்னுடைய  
சமாதானங்கள் தேவை இல்லை 
தேவை  
உன்னுடைய சம்மதங்களும் 
உன்னுடனான சம்பந்தங்களும் மட்டுமே!

ஆகையால்,நான்!!!




அன்பே!! 
இதைத்தான்  நீ  
விரும்பிகிறாய்  என்றால் 
இனி  உன் விழியிலும் படுவதில்லை 
உன் நிழலையும்  தொடுவதில்லை...

நினைவு ஏணி....







தொட்டனை தூறும் மணற்கேணி 
சொல்லிவிட்டான் வள்ளுவன் அன்று..

உன்னை  தொட்டு  அணைத்த  நிமிடங்கள்  
எண்ணி  ஏறுது என் நினைவுகள்  
நம்  காதல்  ஏணி...

மகாகவி பாரதி பிறந்தநாள்!!! DEC-11



வாழ்க நீவிர்!!!

மறுபிறவி ஒன்று நீர் கண்டு 
உன் ஆசை கனவாய் நீ விரும்பிய  
புதுமை பெண்ணை கண்ணாரக்கண்டு 
அப்பெண்ணோடு காதலும் கொண்டு...

எங்கள் சோகம் அறிந்து உண்மை உணர்ந்து 
எழுதுவாய் நீயும் 
பல புரட்சிகரமான 
பெண்ணாதிக்க கவிதைகளை...

தனிமையின் துணை...




உடன் கட்டை கூட
ஏறுவாய் நீ- என்று
நான் நம்பிய
வருங்காலத்தை  பொய்யாக்கி!

என்
எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கி
தனிமையின் துணையில்
இருந்த நான்!

இன்று ஐயப்பனின் துணையுடன்
பதினெட்டு படி
எதிர்நோக்கி..

அட்டைப்பூச்ச்சி காதலிகள்...



உடலோடு ஒட்டியே இருக்கும் 
அட்டைப்பூச்ச்சி காதலிகளை உணர்வதே இல்லை 
எந்த காதலனும் 
விட்டு விலகி இரத்தம் கசியும் வரை..