வானம் தழுவும் மேகமே..
தழுவியபடியே நழுவி நழுவி..
மெல்ல மெல்ல நகர்ந்தேறி
நீயும் ஓர் நாள் சென்றிடுவாய்..!
உலகம் வியந்து
செல்ல நினைத்திடும்
அப்பிரபஞ்ச காண்டம்...!
உலா வரும் நிலவே
ஓர் நாள் நீயும் உறங்கிடு..!
இல்லை மெதுவாய்
மேகத்தின் பின்
சென்று மறைந்திடு..!
ஓ சூரியனே..!
உனக்கும் இவ்விதி
பொருந்தும் என்றுணர்ந்திடு...!
ஒருங்கிணைத்த
சோகம் சேர்த்து
கருமை தீட்டிய
கார்மேக முகம் கொண்டிடு..!
ஊர் சேர்த்து
தேர் இழுப்பார்
திருவிழாவில்...!
ஊருக்கே தேர் இழுத்த
எந்தன்
ஒற்றை தோள்
அறிவால் அவள்..!
ஊரே நனைந்திடும் படி..
ஊரே நினைத்திடும் படி..
ஓர் பெருமழை பொழி..!
மறவாது கூறிடு..!
செங்குத்தென பாயும்
துளிகளிடம்...
இம்மழையின் செயலும்
அத்துளியின் சேவையும்..!
நேரென அவள்
நெற்றிப்பொட்டில் விழுந்து
மெல்லமாய் உருண்டோடி
நெஞ்சாங்கூட்டில் இறங்கிடு..!
விஷமென தேக்கி
வைத்திருக்கும் - அவளின்
இயலாமை கரைத்திடு..!
அவளை உலுக்கி உலுக்கி..
அவளை உலுக்கி உலுக்கி...
நீ எத்தருணத்திலும்
தவறில்லை என்றுரைத்திடு..!
வருத்தங்களே ஆயினும்
அழுத்திடட்டும் அந்நாள்
அவளும்..!
அவள் அழுகை ஓயும்
வரை...
ஒரு கணம் கூட
நீயும் ஓய்ந்திடாதே..!
அவளின் வீணற்ற
குற்றஉணர்ச்சிகள்
மடியும் முன்
நீ முடியாதே..!
நீரோடு நீராக
சோகம் கலக்கட்டும்..!
இனிமேல்
அவள் வாழ்வு களைகட்டும்..!
அவள் காதுகளில் வடிகின்ற
துளிகளிடம் கோரிடு..!
காலச்சக்கரம் சுற்றிய
கலாச்சார
திசையில் மாறித்தான்
போனோம் நாமும்..!
நிச்சயம் பிழை
உன் மீதில்லை..!
அவள் பால் என் காதல்
சுத்தம் என்று
மழை சத்தம் தாண்டி
கூறிடு..!
இதை மட்டும்
என் சேதியாய்
தகவல் தந்திடும்படி...!
உன்னின் துளி போல
அத்தனை சுத்தமானவள்..!
அழுதோய்ந்த அவள்
முகம்தனை உன் நீர்
கொண்டு கழுவிடு..!
அவளின்..
இயலாமை,சோகம்,
அழுகை,
காதல்,அன்பு,
என யாவும் கண்டு
நானே கேட்டிடாத
ஒரு செயல் நீயும் செய்வாய்..!!
உலகம் கண்டிராத ஓர் நிகழ்வு...!
உலகம வியக்கும்
தினமனவே அந்நாள் மாறும்..!
இக்காதல் கண்டு
நீயும் கலங்கி...
சரியனவே
ஒற்றை புள்ளியில்
ஒரே நேரத்தில்
உலகின் அனைத்திலும்
ஓர் பெருமழை பொழிவாய்..!
சரித்திரம் படைப்பாய்..!
முடிக்கையில் நீயே கூறிடுவாய்..!
நாங்கள் இணைந்திருக்க
வேண்டிய
துணைகள் என்று..
தூது செல்லும் மேகமே..!
போதும் உன் சேவை...!
தூறல்களில்
தூரங்கள் குறைத்தாய்..!
மனக்குறை தீர்த்தாய்..!
என் இதயம் குளிர்ந்தது..!
தழுவியபடியே நழுவி நழுவி..
மெல்ல மெல்ல நகர்ந்தேறி
நீயும் ஓர் நாள் சென்றிடுவாய்..!
உலகம் வியந்து
செல்ல நினைத்திடும்
அப்பிரபஞ்ச காண்டம்...!
உலா வரும் நிலவே
ஓர் நாள் நீயும் உறங்கிடு..!
இல்லை மெதுவாய்
மேகத்தின் பின்
சென்று மறைந்திடு..!
ஓ சூரியனே..!
உனக்கும் இவ்விதி
பொருந்தும் என்றுணர்ந்திடு...!
ஒருங்கிணைத்த
சோகம் சேர்த்து
கருமை தீட்டிய
கார்மேக முகம் கொண்டிடு..!
ஊர் சேர்த்து
தேர் இழுப்பார்
திருவிழாவில்...!
ஊருக்கே தேர் இழுத்த
எந்தன்
ஒற்றை தோள்
அறிவால் அவள்..!
ஊரே நனைந்திடும் படி..
ஊரே நினைத்திடும் படி..
ஓர் பெருமழை பொழி..!
மறவாது கூறிடு..!
செங்குத்தென பாயும்
துளிகளிடம்...
இம்மழையின் செயலும்
அத்துளியின் சேவையும்..!
நேரென அவள்
நெற்றிப்பொட்டில் விழுந்து
மெல்லமாய் உருண்டோடி
நெஞ்சாங்கூட்டில் இறங்கிடு..!
விஷமென தேக்கி
வைத்திருக்கும் - அவளின்
இயலாமை கரைத்திடு..!
அவளை உலுக்கி உலுக்கி..
அவளை உலுக்கி உலுக்கி...
நீ எத்தருணத்திலும்
தவறில்லை என்றுரைத்திடு..!
வருத்தங்களே ஆயினும்
அழுத்திடட்டும் அந்நாள்
அவளும்..!
அவள் அழுகை ஓயும்
வரை...
ஒரு கணம் கூட
நீயும் ஓய்ந்திடாதே..!
அவளின் வீணற்ற
குற்றஉணர்ச்சிகள்
மடியும் முன்
நீ முடியாதே..!
நீரோடு நீராக
சோகம் கலக்கட்டும்..!
இனிமேல்
அவள் வாழ்வு களைகட்டும்..!
அவள் காதுகளில் வடிகின்ற
துளிகளிடம் கோரிடு..!
காலச்சக்கரம் சுற்றிய
கலாச்சார
திசையில் மாறித்தான்
போனோம் நாமும்..!
நிச்சயம் பிழை
உன் மீதில்லை..!
அவள் பால் என் காதல்
சுத்தம் என்று
மழை சத்தம் தாண்டி
கூறிடு..!
இதை மட்டும்
என் சேதியாய்
தகவல் தந்திடும்படி...!
உன்னின் துளி போல
அத்தனை சுத்தமானவள்..!
அழுதோய்ந்த அவள்
முகம்தனை உன் நீர்
கொண்டு கழுவிடு..!
அவளின்..
இயலாமை,சோகம்,
அழுகை,
காதல்,அன்பு,
என யாவும் கண்டு
நானே கேட்டிடாத
ஒரு செயல் நீயும் செய்வாய்..!!
உலகம் கண்டிராத ஓர் நிகழ்வு...!
உலகம வியக்கும்
தினமனவே அந்நாள் மாறும்..!
இக்காதல் கண்டு
நீயும் கலங்கி...
சரியனவே
ஒற்றை புள்ளியில்
ஒரே நேரத்தில்
உலகின் அனைத்திலும்
ஓர் பெருமழை பொழிவாய்..!
சரித்திரம் படைப்பாய்..!
முடிக்கையில் நீயே கூறிடுவாய்..!
நாங்கள் இணைந்திருக்க
வேண்டிய
துணைகள் என்று..
தூது செல்லும் மேகமே..!
போதும் உன் சேவை...!
தூறல்களில்
தூரங்கள் குறைத்தாய்..!
மனக்குறை தீர்த்தாய்..!
என் இதயம் குளிர்ந்தது..!
No comments:
Post a Comment