காரணமாய்
என்னை அறியாமல்
தலைவிரித்து சாமியாடும்
என் காதல் தனை
பக்தியென பார்ப்பதும்
பயமென ஒதுக்குவதும்
உன் பார்வை
தேர்வுகளில் உண்டு!
இனியேனும்
என் காதல்
குழந்தையோடு சண்டையிடாதே
உன் அணைப்புகளில்
அதன் கண்கள் கண்டதுண்டா!
பேச முயன்று உழன்று
தோற்று போன வார்த்தைகள்
யாவும் விழி வழி வெளியேறி
உன் நெஞ்சு கூட்டுக்குள்
இறங்குவதை!
இல்லையெனில்
அடுத்த நெருக்கங்களில்
கண்கள் பார்த்து கொண்டே
கட்டி அணை!
சூரியனின் பிரகாசங்களும்
நிலவின் குளிர்ச்சியும்
அதனின் நீ காண்பாய்!
உன் கோவங்களில்
பிரிவின் அச்சம் கொண்டு
பரிதவித்த
காதல் குழந்தையின்
கண்களில்
நயாகரா நீரூற்று
ஓடியது நிஜம்!
உன் அருகாமைக்காக
மட்டுமே சத்தமிடும்..
ஒரு பொழுதும்
நெறியற்ற எண்ணங்களின்
வாள்களோடு அல்ல!
உன்னோடு நான் வாங்காமல்
மிச்சம் விட்டிருக்கும்
சிறு சிறு
யாவும் என் நியாபக
துளிகள் உனக்காக!
ஒரு போதும் கொணர்ந்திடாதே
மீண்டும் என்னிடத்தில்!
பிரியும் நாளில் இருந்து
நான் அழ போகும்
நிஜம் யார் அறிவார்
யார் எனை தேற்றுவார்
உனை தவிர!
No comments:
Post a Comment