உன் கண்ணோரம்
காதல் கண்டது நிஜம்
நீ என்னோடு
காதல் கொண்டது நிஜம்
எக்காரணம் கொண்டு
உன் கண்ணின்
காதல் கழற்றி வைத்தாய்..?
உன் நெஞ்சோரம்
காதல் ஆசை கொண்டது நிஜம்
காதல் கடல் இறங்காது
கரையோரம் காதல் கழற்றி
வைத்ததன் உண்மை என்னவோ?
ஏமாற்று வித்தைகளில்
எல்லா முறையும்
ஏமாற்றம் கொண்டும்
மாற்றம் கொள்ளாத என் மனம்!
எதனின் நினைப்பில்
நாடகம் போடுகிறாய்?
என் நினைப்பில்
நாடகம் துறப்பாயோ?
என் நினைவை நெஞ்சில் கொள்வாயோ
இல்லை
கொண்ட நினைவையும்
என்னையும் கொல்வாயோ?
ஆசைகள் நீட்டியதும்
என்னுள் ஊட்டியதும்
உன் விழிகளும்
மொழிகளும் தானே..!
தானென தோன்றி
வரவில்லையே!
தோற்றம் கொடுத்த உன் விழிகள்
மறைவு தந்த உன் மொழிகள்..!
இனி மேலும் வேண்டுமா?
இனி இறைவனை வேண்டுமா
என் மனம்...?
காதல் பறவை
விடுதலை செய்வாயோ?
காதல் துறந்து
பறவை கொல்வாயோ?
No comments:
Post a Comment