பிரியும் வரை - தயக்கம்..!
புரியும் வரை - குழப்பம்..!
அறியும் வரை - ஆற்றாமை..!
அறிகையில் ஏமாற்றம்...!
நிஜம் காணும் போது
நீயும் நன்கு உணர்வாய்!!
அரண் கொண்ட அற வாழ்வு..!
சிறகுகளும் சிந்தனைகளும்
உன் வசம்..!
மனமுவந்த விருப்புபெறுப்பு
உன் பொறுப்பு..!!
சில வாய்மொழிகள்
கேட்டறிபவை அல்ல..!
உணர்ந்து அறிபவை..!
கேடின் கொடிதுணர்ந்து
தேடினும் - நினைவுகளினூடே
மட்டும் காண்பாய்..!
வீழும் வேளையில்
உணர்ந்தென்ன லாபம்..!
வீழ்ந்தெழுந்து விடியல்
காண்கையில்
வானில் என் விடியல் இல்லை..!
No comments:
Post a Comment