Monday 7 November 2016

நரம்புகள் அறுந்த நாண்..!

நெஞ்செனும் கூட்டில்
நானும் ஒரு
நல்வீணை செய்து
காதல் இசை மீட்டினேன்..!

உன் விழிகளோடு
உன் நினைவுகளோடும்
மட்டுமே
நிஜங்கள் பழகினேன்..!

உன் விழிகள் பார்த்தே
விஜயம் கொண்டன
என் தினசரிகள்..!

உன் குரல் கேட்கையில்
த்வனி நாதம் கொண்டு
காதல் ராகம் பாடினேன்...!

அடங்காத ஆசைகள்
என்னோடு உன்மேல்..!
அடைய வேண்டி
வேண்டிய தெய்வங்கள்
என்னின்
எண்ணிக்கையில் இல்லை ..!

உன் நிஜங்கள் அறிகையில்
நாட்களின் நீளம்
புரிகிறது!
நெஞ்செனும் காட்டில்
கனவுகள் எரிகிறது!

தூரங்களின் வெறுமைகள்
பிரிவின் தனிமைகள்
புரிந்தன
என் மனமும்
என் கனவும்..!

இன்றும் அவ்வீணை
என்னோடு  உண்டு..!
நரம்புகள் அறுந்த நாணில்
நானும் இல்லை
நாணின் இசையும் இல்லை..!

No comments:

Post a Comment