இன்னும் என்னை காயபடுத்தி
கொண்டு தான் இருக்கிறது
உன்னை காயப்படுத்திய நாட்கள்
விலகியே நிற்கிறேன்
உன் வாழ்வில் இருந்து
இனியும் உன்னை
வருத்த விரும்பாமல்.
ஒரு போதும்
இனி கிடைக்கபோவதில்லை
நீயும்
அந்த அழகிய பொழுதுகளும்
இனி யோசித்தும்
உன்னிடம் யாசித்தும்
யாதொரு பயனும் இல்லை.
யாரோ ஒருவனாய்
வருவதை விட
உன்னுடைய
இந்த பயணத்தில்
இனி நான் இல்லை-யாராகவும்..!