ஏன் என் பாதையில் வந்தாய்..?
ஏன் பாதியில் போகிறாய்..?
ஏன் என் பாதியாக மறுக்கிறாய்..?
பயத்தோடு தான் மறைக்கிறேன்..!
உனக்கென அனைத்தையும்
துறக்கிறேன்..!
நீயே என் பதியாக
விரும்புகிறேன்..!
ஆட்கொண்ட மௌனம் அகலட்டும்!
உயிர் தகவல் தருவாயோ?
தகவல் தந்து உயிர்
காப்பாயோ...!
உயர்திரு நானோ
மதி மறந்து
என் திருமதி நீயாக
விரும்புகிறேன்..!
மங்கலாய் தெரியும்
கனவுக்காட்சிகள்
மறைந்தே போகுமா..!
மணமாலை சூடுமா..?
காத்திருக்கிறேன் கனவுகளோடு..!
ஆமோதிப்பதாய்
முடியசைத்து சிரிப்பாயாக..!
No comments:
Post a Comment