அன்பு உணர்த்திய உன் கண்கள்..
தொட்டும் விடாமல் விட்டும் விலகாமல்
இணைந்தே சென்ற நம் பாத சுவடுகள்..
கூச்சம் போக்கிய உன் குளிர் புன்னகை..
ஏக்கம் உணர்ந்த உன் விடுமுறை பிரிவு..
பரஸ்பரம் நலம் விசாரித்த நம் விரல்கள்..
சோகங்கள் பகிர்ந்த உன் தோள்கள்..
இவை அனைத்துமாகி இருந்த நான்!
இவையேதும் இன்றி
இன்று தனித்து பயணிக்கிறேன்
நினைவுகளின் உதவியோடு!!!