Wednesday 23 November 2016

மௌன பனிக்கட்டி..!


சுற்றம் சூழ என்னை
கொண்டாடும் பொழுதிலும் கூட
லயிக்கவில்லை
என் மனம் இன்பத்தில்..!

ஏதோ ஓர்
சோகம்
முகில்தனில் வந்திறங்கி
முகம்தனில் தவழ்கிறது..!

தனிமையின் துயர்
கொஞ்சம் கொஞ்சமாய்
தேங்குகிறது நெஞ்சோடு..!!

யாருமற்று வாழ்வு
வாழ்வதை போல
ஓர் உள்ளுணர்வு..

யாதும் இருந்தும்
ஏதும் அற்றது
போல்
ஓர் மிதமிஞ்சிய சோகம்..!

கொஞ்சமே தயங்கி...
கொஞ்சம் யோசித்து..
காரணம் கண்டிட..
தனிமை கொன்றிட..

நொடிகளில்
என் இதய பரண்
ஏறி பார்க்கையில்
நீ மட்டும் நிழலாடுகிறாய்..!

உன் நினைவுகள் மட்டும்
என்னை உயிர்ப்போடு
வைத்திருக்கிறது...!

நீ விட்டு போன
நான் மட்டும்
மிச்சமென இருக்கிறேன்...!

மௌன பனிக்கட்டியை
எப்போது உடைப்பாய்?
காத்திருக்கிறேன்
கொஞ்சம் சோகத்தோடு
கொஞ்சும் காதலோடு..!

No comments:

Post a Comment