முறிந்தசிறகுகள்
Tuesday 13 January 2015
உன் புன்னகை..
ஆயிரம் நகைகள் அணிந்து
அழகாய் நீ நடந்து வந்தாலும்
உனது புன்னகைக்கு ஈடாய்
எதுவும் மின்னவில்லையடி
Monday 12 January 2015
காதல் கைகள்..
எனக்கு உன்னுடைய
சமாதானங்கள் தேவை இல்லை
தேவை
உன்னுடைய சம்மதங்களும்
உன்னுடனான சம்பந்தங்களும் மட்டுமே!
ஆகையால்,நான்!!!
அன்பே!!
இதைத்தான் நீ
விரும்பிகிறாய் என்றால்
இனி உன் விழியிலும் படுவதில்லை
உன் நிழலையும் தொடுவதில்லை...
நினைவு ஏணி....
தொட்டனை தூறும் மணற்கேணி
சொல்லிவிட்டான் வள்ளுவன் அன்று..
உன்னை தொட்டு அணைத்த நிமிடங்கள்
எண்ணி ஏறுது என் நினைவுகள்
நம் காதல் ஏணி...
மகாகவி பாரதி பிறந்தநாள்!!! DEC-11
வாழ்க நீவிர்!!!
மறுபிறவி ஒன்று நீர் கண்டு
உன் ஆசை கனவாய் நீ விரும்பிய
புதுமை பெண்ணை கண்ணாரக்கண்டு
அப்பெண்ணோடு காதலும் கொண்டு...
எங்கள் சோகம் அறிந்து உண்மை உணர்ந்து
எழுதுவாய் நீயும்
பல புரட்சிகரமான
பெண்ணாதிக்க கவிதைகளை...
தனிமையின் துணை...
உடன் கட்டை கூட
ஏறுவாய் நீ- என்று
நான் நம்பிய
வருங்காலத்தை பொய்யாக்கி!
என்
எதிர் காலத்தை கேள்விக்குறியாக்கி
தனிமையின் துணையில்
இருந்த நான்!
இன்று ஐயப்பனின் துணையுடன்
பதினெட்டு படி
எதிர்நோக்கி..
அட்டைப்பூச்ச்சி காதலிகள்...
உடலோடு ஒட்டியே இருக்கும்
அட்டைப்பூச்ச்சி காதலிகளை உணர்வதே இல்லை
எந்த காதலனும்
விட்டு விலகி இரத்தம் கசியும் வரை..
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)