Wednesday 31 August 2016

பயணங்கள் முடிவதில்லை..!

பரிச்சயமும்
அறிமுகமும் அற்ற
முகங்களோடு
புதியதொரு பயணம்!!

சில பயங்களோடும்
தயக்கங்களோடும் தான்
நானும் தொடக்கினேன்..!

இன மொழி கடந்து
சங்கீதங்களில் நாம்
சங்கமம் ஆன நொடிகளில்
புரிந்தது
பெரியோர்களின் பேரன்பும்
பெருமனசும்...!

வயதின் தாழ்வாரம்
பாராமல் வாஞ்சையோடு
பழகிய மூத்தோர்களுக்கு
நன்றி..!

இயேசுக்கள் கணபதி
ஆன தருணங்களும்..
கருத்தம்மா சோகம் மறைத்த
குருவம்மாக்களும்..
பார்வைகளில் பன்முகம்
கொண்டு விவரித்த
விலாங்கு மீன்
கண்காரிகளும்...

எப்பொழுதும் முன்னின்ற
இளவட்டங்களும்..
கூச்சம் நீக்கி மேடையேறிய
உள்ளங்களும்...
ஒரு பொழுதும் அகலாது
என் இதயம் விட்டு..

நாட்களின் நீளங்கள்
நாமே அறியாமல்
கொஞ்சம் கொஞ்சமாய்
கரைந்து குறைந்தே போனது...

இன்று விழிக்கையில்
கடைசி நாள் என்னும் சோகம்
தவழ்கிறது என் இதய
பரண்களில்...

நால்வர் என வந்து
நாற்பதோடு திரும்புகிறேன்..

வாழ்க்கை வட்டத்தின் சுற்றுகளில்
எங்கேனும் ஓர் புள்ளியில்
யாரேனும் நான் மீண்டும்
சந்திக்க கூடும்..

பயணங்களின் நினைவுகளை
அசை போட போகும்
அந்த நொடிகளுக்காக
நானும் காத்திருக்கிறேன்..

அதன் மட்டும் நினைவுகள்
தாங்கி இருக்கிறேன்..

புது உறவுகளுக்கு நன்றி!
என் வாழ்வின் புது வரவுகளுக்கு நன்றி..!

வசீகர குரல் கொண்ட ஆர்டிக்கு நன்றி..
எப்பொழுதும் சிரிப்பு பூ நீட்டிடும்
தேரோட்டி பெர்ரிக்கு நன்றி..

பயணங்கள் முடிவதில்லை
மீண்டும் சந்திப்போம்
ஓர் இனிய பயணங்களில்..

---EURO TRIP

No comments:

Post a Comment