Monday 7 November 2016

கடந்து போகும் வானம்..!!


உன்னை தேடி என் விழிகள்
அலையத்துவங்கிய
சில நொடிகளில்
எச்சரிக்கை மணி என்னுள்
அடிக்காமல் இல்லை

நீ
கடந்து போகும் வானமா ?
இல்லை
காலம் கடந்தும் வாழ போகும்
என் ஒற்றை வானமா ?

இதுவும் கடந்து போகுமா
இல்லை
இதயம் கடத்தி போகுமா ?

கடந்து போன பலர்
கடக்க போகும் சிலர்
கிடைக்க போவது யாரோ..!

கண்ணீர் துடைக்க
போவது யாரோ?

எச்சில் இலை
எடுப்பார் யாரோ?
தொடுவார் யாரோ?

மனிதத்தனம் இறந்து வாழும்
மனிதர்கள் கடந்தவன்
நான்!

மனிதம் தொலையா
இதயம் கொண்ட
சிறு குழந்தை தான்!

ஓடுபாதை தவறென தெரிந்து
ஓடுவதை விட
நிறுத்திக் கொள்வது நல்லது..!

சில கனவுகள்
கனவாகவே இருப்பதும்
சில ஆசைகள்
அடையாமல் விடுவதும்
சில நேரங்களில்
நன்மை பயிர்க்கும்..!

வினாடிகள் நிமிடங்களாய்
வினாடிகள் வருடங்களாய்
வினாடிகள் யுகங்களாய்
வாழ பழகினேன் !!

யுகம் யுகமாய் காதல்
வாழ்வு வாழ வந்தேனே!!
காதலை வாழ செய்தேனே!

No comments:

Post a Comment