என் சொற் யாவும் பொய்யெனவே
தெரியும் - மெய்யென நீயும்
அறியும் ஓர் நாளும்
வருமே!
மெய்ஞானம் காணும் அந்நாளில்
என் புலன்கள் எவற்றிற்கும்
உன் அழுகுரல் புலப்படாது!
அந்நாளும் இனி எந்நாளும்
இந்நாள் போல்
வாய்ப்பொன்று வரப்போவதில்லை
தரப்போவதில்லை!
வருங்காலம் கணித்து சொல்கிறேன்!