Friday 18 November 2016

அன்பிற்கு வாய்த்த பெருமை..!

`

என்னை அழ வைக்கும்
உரிமையும்...
தைரியமும்...

கொண்ட அன்பிற்கும்,
அன்போடு நான் கொண்டவர்கும்,
அன்பில் என்னை கொண்டவர்க்கும்
மட்டுமே வாய்த்த பெருமை!!

எங்கு என்னோடு நீ நெருங்கினாய்?
பிரிகையில் நான் ஏன் நொறுங்குகிறேன்?
ஏன் என்னோடு நெருடல் இன்று..?
நெஞ்சோடு ஏன் உதறல் இன்று..?

நிலா அற்று போன வானமாய்
என் மனம்.!
இந்த இரவு
கனவுகள் கலைந்த இரவா..?
தூக்கம் தொலைத்த இரவா..?

துக்கம் தாங்கிய என் விழிகள்
அறிந்தவள் நீ..
அறிந்தும் ஏன் அமைதி
கொள்கிறாய்..?
அழுகையில் காதல்
சொல்கிறாயோ..?

ஒற்றையடி பாதை தானே என் வாழ்வு..!
எவ்வழியில் உள்நுழைந்தாய்!!
நடை பாதை பெரிதாக்கினாய்..!

என் மென்மைகள் முற்றும்
அறிந்தவள் நீ...
உன் விரல்களின் மென்மைகள்
உணர்ந்தவன் நான்!!

நம் விரல் சேர்கையிலே
என் ஆறாம் விரல்
அறுத்தெறியப்படும்
என்பது நிச்சயிக்கப்பட்ட உறுதி!!

விதிகளின் வசம் விட
விருப்பம் இல்லை..!
கொஞ்சம் மதி கொண்டு
உன் மதி சலவை செய்..!

என்னை அழ வைக்கும்
உரிமையும்..
தைரியமும்..

கொண்ட அன்பிற்கும்,
அன்போடு நான் கொண்டவர்கும்,
அன்பில் என்னை கொண்டவர்க்கும்
மட்டுமே வாய்க்கும்!!
அன்பிற்கினியவள் நீ!!

No comments:

Post a Comment