உன் விழிகளில்
வழிந்தோடிய
காதல் திராவகம்
பருகியவன் நான்..!
காதல் மறைத்து
கள்ளம் கூறும்
உன் விழிகளின் மொழிகள்
யாதும் உணர்ந்தவன்
நான்!!!
என்னை விட்டு
தூரமாய் இருத்தல்
நன்று என்று
நீயே தீர்மானித்தாய் - இன்று
நீயே தூரமாகிவிட்டாய்...!
உன் விழிகளில்
வழிந்தோடிய
காதல் திராவகம்
கலைத்தவள் நீ!
நீ எனதில்லை என்று
ஆகும் பொழுதுகளில்
யாராகி போவேனோ நான் ?
உன் வாழ்வில்
யாரோ ஆகி போவேனோ??
No comments:
Post a Comment