Tuesday 8 November 2016

விழிகளின் மொழி..!


உன் விழிகளில்
வழிந்தோடிய
காதல் திராவகம்
பருகியவன் நான்..!

காதல் மறைத்து
கள்ளம் கூறும்
உன் விழிகளின் மொழிகள்
யாதும் உணர்ந்தவன்
நான்!!!

என்னை விட்டு
தூரமாய் இருத்தல்
நன்று என்று
நீயே தீர்மானித்தாய் - இன்று
நீயே தூரமாகிவிட்டாய்...!

உன் விழிகளில்
வழிந்தோடிய
காதல் திராவகம்
கலைத்தவள் நீ!

நீ எனதில்லை என்று
ஆகும் பொழுதுகளில்
யாராகி போவேனோ நான் ?
உன் வாழ்வில்
யாரோ ஆகி போவேனோ??

No comments:

Post a Comment