Tuesday 31 May 2011

இன்றோடு முடிந்துவிடாதா...



என்ன தவறு என்றே புரியவில்லை
ஏதோ ஒரு தவறு செய்துவிட்டேன் 
என்று மட்டும் தெளிவாய் தெரிகிறது - 
உன் கோபத்தை பார்க்கும் போது...

சற்றேனும் உன்னை விலகி நடந்தால் கூட
மனம் வருந்துவாய் நீ...
இன்றோ என்னை விட்டு விலகியே
இருக்கிறாய் வெகுகாலமாய்...

இன்றோடு முடிந்துவிடாதா
இந்த தனிமையும் வெறுமையும் 
என்ற எதிர்பார்ப்புடன் 
உன்னை எதிர்நோக்கி நான்...

ஓராயிரம் உறவுகள் வந்து திட்டிவிட்டு
செல்லலாம்! உனது உறவே எனது 
வாழ்வின் பெரிய வரவு...
அன்பை கொட்டுவதற்கும்
பாசமாய் தலையில் குட்டுவதற்கும்
உனக்கு மட்டுமே உரிமை இருப்பதை 
நன்கு நீ அறிவாய்!
இந்த ராமனை குட்டும் சீதை நீயே..

இன்றோடு முடிந்துவிடாதா
இந்த தனிமையும் வெறுமையும்....



Monday 23 May 2011

நான் சாமியாகிறேன்!



அர்த்தம் புரியா கனவு 
அர்த்த ராத்திரியில் அடிக்கடி வருவதுண்டு! 
தாய் தந்தை சொல்லி தந்தது 
சாகும் கனவு காண்பது தவறு!
அன்றிலிருந்து இன்றுவரை
சாவு என்றால் பயம்!

அர்த்தம் புரியா கனவு 
அர்த்த ராத்திரியில் அடிக்கடி வருவதுண்டு! 
உயிர் பிரியும் தருவாயில்
உன் மடியில் படுத்துக் 
முகம் பார்த்து மகிழ்வதாய் ஒரு கனவு!

சாகும் கனவு காண்பது தவறு!
சாவு என்றால் பயம்!!

இப்பொழுதெல்லாம் நீ வருகின்ற கனவுகளில் 
மட்டும் தான் தூக்கத்தை தொலைக்கிறேன்!
நானே இறப்பதாய் இருந்தாலும்
நீ வரும் கனவுகளுக்காக
மட்டும் தான் தூக்கத்தை விரும்புகிறேன்!
கனவில் மட்டுமே உன்னை காண்பதால்!

சாவு என்றால் பயம்!
சாவு என்றால் சாமியாவது!

என்னை காதலிப்பதாய்
சொல்லாவிட்டாலும் பரவாயில்லை!
காதலிப்பதாய் 
புரிந்து கொண்டாயெனில் போதும்!


தாய் தந்தை சொல்லி தந்தது 
சாகும் கனவு காண்பது தவறு!
சாவு என்றால் பயம்!
சாவு என்றால் சாமியாவது!


நான் சாமியாகிறேன்!
நான் சிவனாகிறேன்!

Sunday 15 May 2011

உன் காதலை தவிர.....



     
தேடி வருகிறேன் 
      ஓடிஒளிகிறாய்! 
காரணம் கேட்கிறேன் 
      மூடி மறைக்கிறாய்!
மணக்க விரும்புகிறேன் 
      மனம் வெறுத்து பேசுகிறாய்!                       
எனது வருத்தங்கள் எல்லாம் 
      விட்டுவிட்டு போனதற்காகஅல்ல!
உன்னை மறக்க முடியாத அளவுக்கு 
      என்னை நீ காதலித்தற்காக!
மறக்கவும் முடியாத, மறுக்கவும் முடியாத 
      எனக்குள் இருக்கும் உண்மை நீ! 
என்ன எதிர்பார்த்து விட போகிறேன் உன்னிடம்
உன் காதலை தவிர.....!