என்ன தவறு என்றே புரியவில்லை
ஏதோ ஒரு தவறு செய்துவிட்டேன்
என்று மட்டும் தெளிவாய் தெரிகிறது -
உன் கோபத்தை பார்க்கும் போது...
சற்றேனும் உன்னை விலகி நடந்தால் கூட
மனம் வருந்துவாய் நீ...
இன்றோ என்னை விட்டு விலகியே
இருக்கிறாய் வெகுகாலமாய்...
இன்றோடு முடிந்துவிடாதா
இந்த தனிமையும் வெறுமையும்
என்ற எதிர்பார்ப்புடன்
உன்னை எதிர்நோக்கி நான்...
ஓராயிரம் உறவுகள் வந்து திட்டிவிட்டு
செல்லலாம்! உனது உறவே எனது
வாழ்வின் பெரிய வரவு...
அன்பை கொட்டுவதற்கும்
வாழ்வின் பெரிய வரவு...
அன்பை கொட்டுவதற்கும்
பாசமாய் தலையில் குட்டுவதற்கும்
உனக்கு மட்டுமே உரிமை இருப்பதை
நன்கு நீ அறிவாய்!
இந்த ராமனை குட்டும் சீதை நீயே..
இன்றோடு முடிந்துவிடாதா
இந்த தனிமையும் வெறுமையும்....