ஏதோ ஓர் புள்ளியில்
ஒன்றென இருந்து
பரிச்சயம் அற்று
பரஸ்பரம் பேசாது
கடந்து போன நாம்!
காலங்களும் நாடுகளும் கடந்து
காரணங்கள் அற்று
உறவென ஆனோம்- நட்போடு!
புரியாத பிரியம்
எப்போதும்
பிரியும் போது புரியும்!
இப்போது உன் அன்பில் புரிகிறது!
உறவென மட்டும் அன்றி
உணர்வெனவும் உடன் வருகிறோம்!
பிரபஞ்சத்தின்
உணராத மிச்ச அழகும்
அறிந்திராத அதிசயமும்
ஆண் பெண் நட்பில்
ரகசியமாய் ஒளிந்துருக்கிறது!
வான் கொண்ட மட்டும்
நீளும் ஆகாயமாய்
நீளட்டும் நம் நட்பு!
பின்னாளில் ஓர் புள்ளியில்
சகிதம் அமர்ந்து
எண்ணிலடங்கா வானத்து
நட்சத்திரங்கள் என
நம் நட்பின் நினைவுகள்
எண்ணிடுவோம்!
No comments:
Post a Comment