Monday 31 October 2016

யாவும் காதலை சாரும்!!


தொலைத்த நன் கோடாளிகள்
எத்தனை எத்தனையோ..
தொலைந்த கேடாலிகள்
எத்தனையோ?

பிறிதோர் சொல் இனி கேளேன்
பாதியில் பிரிந்தோர்
சொல் இனி கேள்வேனோ?

மதி மறந்த கதி
சுற்றம் துறந்த சதி
முற்றும் தொலைத்த விதி
யாவும் காதலை சாரும்!!

என்னின் பாதியாய்
என்னின் பதியாய்
நீ!!

என் காதல் இனி
நீ ஆகிட வேணும்..!
காதல் - இனி
நாம் ஆகிடவேணும்..!

இனிப்பு எடுத்து கொள்ளுங்கள்..!



இளைப்பாற நேரமின்றி 
கவலைகளில் களைப்புற்று 
காதல் நினைவுகளோடு 
நாட்கள் நகர்த்தினேன் 
நானும் தான்..!

வெகு நாள் களித்து
களிப்புறும் நிகழ்வு 
காண கண்டேன்..! 
கண்ணோடு 
கண்ணீர் கடல் கொண்டேன்!!

தூக்கம் வராத ஒரு
நடுநிசியின் பின்னிரவில் 
நானும் ஓர் 
உறுதி கொண்டேன்..!

விருப்பம் அற்ற மாற்றங்கள் 
மிகவும் 
துயரமானவை!!
இனி யதார்த்தம் உணர்ந்து 
வாழ பழகினேன்..!

என்னின் வைராக்கியங்கள் 
அனைத்தும் 
உன் அன்பிற்கு முன்னால் 
கொஞ்சம் கொஞ்சமாய் 
தன் பலம் தொலைத்தன..!

ஒவ்வொரு முறையும்
பார்க்கையில் 
ஏதேதோ அர்த்தம் தாங்கி  
சிரிக்கிறாய்..!

மிகை ஆகாத அளவில் 
உலகின் மிக அழகான 
சிரிப்பை 
உதிர்க்கிறாய்!
அஃது சிரிப்பு அல்ல 
சிம்பொனி..!

உன் விரல் பிடிக்கிறேன் நான்..!
வெட்கம் உதிர்க்கிறாய்..நீ!
இனிப்பு எடுத்து கொள்ளுங்கள் 
காதல் பிறந்துருக்கிறது..!

Tuesday 18 October 2016

வாசங்களோடு வாழ்கிறேன்..!


நம் காதல் காலங்களில்
வசந்த நாட்களில்
பூத்த காதல் பூக்களை
முகர்ந்துகொண்டே இருப்பேன் !...

எங்கனம் எக்கணம்
விட்டெறிந்தாய்??

உன்னை வழியனுப்பிய
நாளில்
ரயில் பயணத்தின்
ஜன்னனல்களோடு
வீசியெறிந்தாயோ..?

உன் திருமண நாளின்
மணமாலை சூடுகையில்
நம் காதல்
பூக்கள் களைந்தாயோ..?

புதிதாய் பூத்த மலர்கள்
தூவிய
பூ மஞ்சங்களோடு
இணைகையில்
நம் காதல் மலர் கசக்கி
எறிந்தாயோ?

எங்கனம் எக்கணம்
விட்டெறிந்தாய்..?

சம்மதங்கள் கோரிய
என்னோடு சமாதானங்கள்
கூறிய வெள்ளை புறா
நீயோ!!

புதிதாய் புகுந்த வீட்டின்
புன்னகை
பூ தானே நீயும்!

தம்பதி சகிதம்
கோயில் செல்கையில்
கணவன் முதலாய் பூச்சூடிய
வேளையில்
காதல் பூவின் கரு
அறுத்தெறிந்தாயோ?

வீசிய மணம்
நேசம் கொண்ட மனம்
மாறிடாது..!
இன்றும்  என் வானின்
ஒற்றை கனா நீ!!

சில வார உறவின்
பிரிவு உபசரிப்பின்
சோகம் கொண்டு
திரும்புகையில்
காதல் மலர்
தொலைத்தாயோ??

எங்கனம் எக்கணம்
விட்டெறிந்தாய்??

சேகரித்த கனவோடு
கணவனோடு சிறிய பிரிவின்
துயரோடு
உன் தனிமை
நெடுந்தூர பயணத்தின்
பரிசு பூச்சண்டுகளில்
விரல் இடுக்குகளில்
விழ விட்டாயோ?

தவிப்புகளின் மத்தியில்
தரை இறங்கி
துணை கண்டு
ஓடுகையில்
ஓடு பாதையின்
பாதியில்
மறந்தாயோ?

தலை முழுகையில்
சருகென கண்டு
காதல் மலர்
முழுதும் முழுகினாயோ?

எங்கனம் எக்கணம்
விட்டெறிந்தாய்??

நம்முள் பூத்த
காதல் பூக்களின்
நினைவுகளோடு...

காதல் நினைவுகளில்
தினமும் லயித்து
காதல் பூக்களின் வாசங்களோடு
வாழ்கிறேன்..!

நம் காதல் காலங்களில்
வசந்த நாட்களில்
பூத்த காதல் பூக்களை
முகர்ந்துகொண்டே இருப்பேன் !...

Monday 17 October 2016

பாதியில் அறுந்த உறவுகள்..!


என் காதல் வளையத்துள்
உன் வளையல் சத்தம்
கேளாதூரம் 
நீ நிற்பது - நன்று!!

நெருங்கி வருகையில்..
நிஜங்களின் நெருக்கம்
அன்பின் அதீதம்
கண்டு...

தூர நடை
நீயும் பழகுவாய்..!
என்னோடு தூர பார்வை 
நீயும் கொள்வாய்..!

தீரும் அன்பு கொண்ட
பெயரோடு வரும்
உறவு அற்று
வாழ்வது மிக நன்று!!

நிச்சயமற்ற உறவு
தரும் அன்பின்
அரவணைப்பை விட..

தனித்த பயணம்
நம்மிருவருக்கும் 
நலம் பெயர்க்கும்
என நம்புகிறேன்!!

துரத்தும் தனிமையின்
வீரியம் அறிவேன் நான்!!
பிரிவின் சோகம் தரும்
வலியின் வேதனை 
அறிந்தவன் தான் நான்!!

யாதும் இருந்து பின் 
யாதும் இழந்து 
வாழ்வதை விட
ஏதும் இன்றி வாழ்ந்திட
விரும்புகிறேன்!!

மிகை படுத்தப்பட்ட
வார்த்தைகள் ஆயினும்
மீள வரும் வழியின்
கடுமையும் கொடுமையும்
கடந்து வந்தவை
தாம் என் கால்கள்!!

அறிந்த உறவுகள்..
வாழ் பாதையின்
பாதியில் அறுந்த
உறவுகள்...
யாவும் கடந்தவை தான் 
என்னின் 
உடைந்த கனவுகள்..!

திசை மாறி
பயணம் மாறி
துணை மாறி
தொலைத்த 
தொலைந்த உறவுகள் 
வாழ்வோடு உண்டு!!

இதனின் நினைவுகள் 
மட்டுமே என்னோடு  உண்டு..!
என் வாழ்வோடு உண்டு..!

Monday 3 October 2016

உலகம் பயில்வது..!



எப்போதும் என்றிட முடியாது
எப்போதேனும் தோன்றிடும்!

எப்புள்ளியில் தொடங்கிற்று
பெண் நேசம்
என்னோடு..!

பள்ளியில் தொடங்கிற்றோ?

அறவே இல்லை..!
சிறு வயது
சிந்தனைகள்
இயற்கையோடு இருந்தது
இயற்கையாய் இருந்தது..!

பள்ளி தோழன் பிரிந்து
பெற்றோர் பிரிந்து
பழகிய ஊர் பிரிந்து
தூரம் போகிறேன்!

கல்லூரியில் அரும்பியதோ?

அரும்பு மீசை
அரும்பிய காலம்!
உலகம் படிக்க விரைகிறேன்
கல்லூரிக்குள்!

குயவன் வீட்டு மண்சேர்
மனம் அது!

எதிர்பால் பார்க்கையில்
எதிர்பார்ப்புகள்
எகிர்வது நிஜம் தானே!

எதிர்ப்புகள் வலுத்தாலும்
எதிரிகள் அமைந்தாலும்
எதிர்பால் ஈர்க்கப்படுகின்றேன்!!

பதின்மன் பருவத்து
பெண்டிர் கண்டு
புருவம் உயர்த்தி
உருவம் கொள்கிறேன்!

தோழனும் தோழியுமாய்
துவங்குகிறது
நகர்கிறது நட்புடனே
கல்லூரி நாட்கள்..!

கொஞ்சம் கொஞ்சமாய்
குயவன் வீட்டு மண்
பானையாகிறது.. !

தூரங்களில் தொலைகின்றதோ..?

உலக படிப்பு முடிந்து
உலகம் சுற்ற
தொடங்குகிறேன்!!

என்னின் உலகங்கள்
நானே உலகங்கள்
என்றிட்ட என் உறவுகள்
விடுத்து..!

தொலை தூர பயணம்
தூரங்களில் பாரம்
கொள்ளும் மனது.!

தொலைந்தே போகும்
இதயங்களில் இருந்த
உறவும்
கலைந்தே போகும்
இதய கனவும்..!

முறைகள் அற்று போன
இவ்வுலகில்
ஒவ்வொரு முறையும்
பெண்ணின் அன்பும்
பண்பும் ஆழ பருகினேன்!

பிரிகையில் சுயம் என
நலம் கண்டு
ஆழ விழுகிறேன்.!

மீள பழகையில்
மீண்டும் பெண்மை
படிக்கிறேன்..!

கருச்சிதைவு கொண்டேன்
என் இதய கூட்டில்
சுமந்த என்
காதல் குழந்தைகளை!!  

கருச்சிதைவின் வலி
கண்டேன்
கொண்டேன் நானும்..!

சதை பிண்டமென கண்டதில்லை
கதை சொல்லி கொண்டதில்லை
பெண் மதிப்பு
பிறவி குணமென..!
பெண் மனசு
பிறவி குருடென..

உலகம் பயில்வது எளிது
பெண்மை அறிவது அரிது!

புரிதலில் என் பயணம்
தொலைக்கிறேன்
புரிகையில் என் வாழ்வு
தொலைக்கிறேன்
உலகம் மறக்கிறேன்..!
வாழ்வில் தொலைகிறேன்!