Tuesday 29 March 2016

ஒரு திங்கள்..!


சிறை வாசம் வந்து
ஒரு திங்கள் உருண்டோடிற்று
இன்றோடு.

காலம் கடத்திய என் காதலால்
காலம் கடத்தப்பட்டேன் நான்

காலத்தின் பிடியில் இருவரும்
வெவேறு திசையில்
இரு துருவமென பிரிந்தே
இருப்போம் இருவரும்
இனி பார்க்கா வண்ணம்!!

யாருமின்றி நான் இருப்பேன் என!!!


சற்றே தாமதித்தாலும் உன் 
விழித்திரையில் கண்ணீர் 
வழிந்தோடிவிடும் தருவாயில் 
அந்த இரவின் தனிமையில் நீ!!

தூரத்தில் என் உருவம் கண்டு 
கொண்ட அந்த ஒரு நொடியில் ..

தேங்கி கிடந்த உன் பயம் 
ஏங்கி தவித்த உன் பாசம் 
அனைத்தும் சேர்த்து 

என் விரல் இருக்கிய 
உன் விரல்களில் உணர்ந்தேன் 
யாதுமாகி நான் இருக்கிறேன் என்று..

ஒரு கணமும் உணரவில்லை 
இன்று யாருமின்றி நான் இருப்பேன் என..

அகதியென வாழும் வாழ்வு!


அழகனவே, அசல் 
அனைத்தும்  தொலைத்து 

இன்று 
நகல்களோடு நடை பிணமனவே  
நானும் வாழ்கிறேன்!!

மண்ணுக்குள் மண் புழுவுன  
என் தலை தாழ்த்திசெல்கின்றேன்..!

நானும் சிரிக்க மறந்து 
சில காலம் ஆயிற்று!

என்னிலை பற்றி தன்னிலை 
விளக்கம் தர கூட யாருமின்றி 
அகதியென வாழும் வாழ்வு!.

எப் பெண்பாலும் குறை 
கூறி பயனில்லை..

எனை நோக்கி குறியீடு 
கொண்டு 
வாழ்க்கை கேள்விக்குறியோடு 
வான் மறையும் நாள் நோக்கி..
நான்...

Thursday 17 March 2016

வாழ்க்கை பரிசல்!!


தனியனவே ஒதுங்கி செல்கிறேன் 
ஓர் ஓரமாய்
என் வாழ்கை பரிசலில்..!

உடன் வந்தோர் அனைவரும் 
பாதியில் தான் 
பாதை மாறி சென்றோர் 
என் வாழ்க்கை பரிசல் விட்டு!!

எவர் பரிசலும் உரசாமல் 
உயிர் துடுப்பு ஏந்தி 
பயணம் செய்கிறேன்!!
தனியன தானே ஒதுங்கி செல்கிறேன்..

இருந்தும் அடிபடுகின்றேன் 
பெரிதாய் உடைபடுகின்றேன் 
நொருங்குகின்றென் பல நூறாய்...!!

கை தவறும் உயிர் துடுப்பு..
தனியன தானே நான் 
மறைந்து போகிறேன்..!!

உயிர்த்திருக்கிறேன் நான்!!!-1


காதல் நினைவுகள்
என் நினைவுகளை விட்டு
நீங்காத நிலையில்
நினைவுப் பயணம் சொ(ல்)கிறேன்
உங்களோடு ..

கானம் பாடும் நினைவுகள் பல..
கல்லறை நினைவுகளாய் சில..
என எனது நினைவுகளை உங்களது
நினைவில் நீங்கா
வண்ணம் கால் தடங்கள் பதிக்கவிறுக்கிறேன்!!

நினைவுகள்  எல்லாம் நிஜங்கள்
தாங்கிய வண்ணம்!!

நினைத்து பார்க்கையில்
கண்ணீர் துளிகள் நீள் கோட்டில்
மேலிருந்து கீழாய் உருண்டோடுகிறது!

கானல் நீரென நானிருக்க
என்னுள்  நீர்த்தடாகம் அமைத்தாய்.
காகித பூவாய் நானிருக்க
என்னுள் தேன் சுரந்தாய்.
கரும்பாறையன நானிருக்க
உன் விழியால் உரு மாற்றினாய்!!

என் கண்கள் கூட சிரிக்க பழகிவிட்டது
உன் உருவம் காணும் வேளைகளில்!


முதல் கோணல் முற்றிலும் கோணல்
இது பழமொழி..
அம்மொழியை சீராக்கி புதுமொழி  வகுத்திட
ஓர் முடிவும் கொண்டு!!

முதல் காதல் தோல்வியின்
துயர் போக்கி
துளிர் விட்டு
மீள எத்தனித்த ஒரு தருணம்..

அறிமுகமற்ற ஒரு உறவென-நீயும்
நட்பு கரம் நீட்டினாய்

என் வாழ்க்கை நேச வட்டத்தின்
அங்கமென நீயும் ஆனாய்

நள்ளிரவில் காரிருளில் மீளும் வழி
தேடி நான் அலைய
உன் நட்பிலி வெளிச்சத்தில்
நல் உலகம்  காட்டினாய்
என் வாழ்வில் மீண்டும் இசை  மீட்டினாய்!!


உன் மன ஆசை கூட்டினாய்
தயக்கம்  கொண்டு தவிர்த்தே வந்தேன்
நட்போடு மட்டுமே...

எறும்பு ஊர ஊர கல் கூட தேயுமாமே!
மங்கை கூற்றுக்கு மனம் தேயாதோ..

அலைகற்றையின் சேவையில்
அன்போடு வளர்ந்தது நட்போடு
என் காதலும்...

விழிகள் பார்த்து மொழிகள் பேசி
மீண்டும் பருகினேன் காதல் தேனை!!!

பருகிய நேரமோ குறுகிய காலம்
காலம் நம்மை பிரிக்க
ஏறுகிறாய் நீயும்  மன மேடை..

தினமும் உனது கைகுட்டையில்
பயணப்படுகிறது
நாலாய் மடித்து வைக்கப்பட்ட என் இதயம்!

அன்பே! உனது விழிகளில் தான்
எனது  விடியல்களை காண்கிறேன்..
உன்னை காணாத நாட்களெல்லாம்
விடியாத இரவுகளின் கலையாத கனவுகளில்
நீ மட்டும் தானடி!!

நித்தமும் பரிசுத்தமாய்
தூய மனதோடு தான் வருகிறேன்!
கோவிலுக்கு சுத்தமாய் செல்வது தானே மரபு!
ஆம்! எனது காதல் தெய்வத்தை
அல்லவா  காண வருகிறேன் !

எதிர்வரும் எந்தஒரு பெண்ணிடத்திலும்
உன் சாயல் நான் தேட
பொருக்கி என எண்ணி
கோவத்தோடு கடந்து செல்கிறார்கள்!

ஆம்!உண்மையில் இத்தனை பெண்களில்
உனை மட்டும்
பொறுக்கி எடுத்த
காதல் பொருக்கி  தானே நானும்!!

பிரிவதாய் நீ உறுதி செய்து விட்டு
கடைசியாய் என் வீடு வந்து செல்கிறாய்.
ஓர் கரிநாளில்...

அறுத்து எறியப்பட்ட நம் கனவுகள்
இறுக்கி அணைத்த நம் நினைவுகள்
என் அறையின் மூலையில்
அலங்காரமின்றி அலங்கோலமாய்..

தயவு செய்து உன் கண்களுக்கும் கொஞ்சம்
நடிக்க கற்று கொடுத்துவிடு
உன் இதழ்கள் போல்  அல்லாமல்
காதல் சொல்லி விட்டு செல்கிறது!

என் உயிர்கூட்டை உருக்கி எடுத்து
உள்ளடக்கி போகிறாய்
உன்  விழியோரம்
வழிந்த  நீரோடு!

தாய் தன் ஒரே குழந்தையை
நேசிப்பது போல் எனது
காதலான உன்னை மட்டுமே
நேசிக்கிறேன்
சுவாசமன சுவாசிக்கிறேன்..

உன் திருமண நாள் அன்று
உரக்க அடிக்க போகும் மேளச்சத்தத்தில்
என் அழுகுரல்
யார் செவிக்கும் சேராமல்
யார் மதிக்கும் எட்டாமல்
யார் விழிக்கும் தெரியாமல்
அடங்கிப்போக போகின்றது என்னோடு மட்டுமே!!


என் இதய வீணையின் நரம்புகளை மீட்டி
ஆனந்த இராகங்கள்
சோக கீதங்கள்
இரண்டும் நீயே இசைக்கிறாய் இன்றும்..

நட்சத்திரமென மின்னும்
அளவான அழகான உன்
புன்ச்சிரிப்பை நினைவில் தாங்கியவாறு..

உன் காதலோடும்
உன்னால் உருவாகிய கவிதையோடும்
உயிர்த்திருக்கிறேன் நான்!!!

மீள்வது எப்போது?


அன்போடு பண்போடு 
நான் வளர்த்த என்  காதல்!!

பண்பாடு கொண்டு 
பெற்றோரின் பாசம் தாண்டாமல் 

மணம்  முடிக்கிறாய் நீ ..

காதல் நோயில் இருந்து 
மீள்வது எப்போது?
நான்!!