Wednesday 29 July 2015

என் கதை!!


யார் இன்றி நான் இல்லை என்று 
உணர்கின்ற ஒரு தருணம்..
அவளை மனம் முடிப்பேன்.
இல்லை அன்றோடு என் கதை முடிப்பேன்.

Tuesday 28 July 2015

தனிமை பாதையில்...


நடை பழகி தந்தேன். 
நல்ல உடை பழகி தந்தேன்..
நாம் விடை பெரும் நாள்  
விரைந்து வருகின்றது.!

இனி எனது இந்த தனிமை 
நடை பயணத்தில் 
ஒரு போதும் எந்த ஒரு உயிர்க்கும் 
கரம் கொடுத்து தூக்கி விட மாட்டேன் ..
கணம் தாங்காமல் அல்ல... 

விடை பெரும் தருணத்தில் 
உன் விரல் ஸ்பரிசம் தரும் 
அந்த கடைசி சில நிமிட வலி தாங்க முடியாமல் ..

என் தனிமை பாதையில் 
உன் கீதம் பாடி செல்கின்றேன் நான்...

சிறை!



என் மனம் படும் வேதனைகளை  
எம்மொழி கொண்டு கவிதை அரங்கேற்றுவேன்!

என் விழி முதல் மொழி வரை 
சிறைப்பட்டு இருக்க...

உன் காதல் இதயத்தில்.. 

Monday 27 July 2015

பிரியும் நாள் தொடங்கியது..




தனிமையில் உன்னை நினைத்து.. 
தாய் பாலுக்கு அழும் பச்சிளம் குழந்தையென 
அழுவேன்  என ஒரு போதும் 
சிந்தித்ததே இல்லை!!.. 

உன் பாசத்தின் வீரியம் புரியும் தருணம் 
நீ என்னை விட்டு பிரியும் நாள் 
தொடங்கியது..  

எமனுக்கு ஒரு கடிதம்



உன்  திருமண செய்தி அறிந்த நாள் முதல் 
என் மரண செய்தி கேட்டு கடிதம்  அனுப்புகின்றேன் 
தினமும் எமனுக்கு 
கையில் மதுகோப்பை ஏந்திய வண்ணம் !..