Tuesday 22 November 2016

விழியின் விந்தை..!


விழியின் வழியே செல்கிறேன்
வலியோடு வருகிறேன்..
வழி தவறிய விழிகளால்..
வலியோடு வாழ்கிறேன்..!

விழிகள் கூறும் மொழிகள்
யாவும் நிஜங்கள்
என நம்பிடும்
விழி குருடன் ஆனேன்!!

கண்டேன் நானும்...
பார்த்த பார்வை மாறி போக..!
கோர்த்த மாலை உதிர்ந்து போக..!
பூத்த சோலை காய்ந்து போக..!

செய்த பிழை
கொய்த விலை..
யார் அறிவார்?
அறிவால் அறிவார்...
அன்பால் அறியார்..

உன் விழியின் பார்வையில்
பார்த்த பின்பு தான்
தெரிகிறது எனக்கு..!

பிழை பார்வையில் இல்லை
பார்த்த விழியோடு என்று..!

விழிகள் மாறி போகாது
விதிகள் மாறி போகும்..!

விழிகள் மாற்றுகையில்
வழிகள் இருப்பதில்லை...!

மாறிய விதிகள் கண்டு
விழிகள் ஓர் நாள் கண்ணீர்
கதை சொல்லும்!!
விதிகள் மாறி போகும்..!

No comments:

Post a Comment