அன்பிற்கினிய தோழியே
அழுதிடாதே..
ஐயம் கொண்டிடாதே..
ஒரு போதும்..!
யாரும் அற்று
போய் விடுவோமோ என்ற
உன் அச்சம் தவிர்..!
ஆண்டுகள் தாண்டி...
பேசாமலே போய்
விடுவோமோ என்றெண்ணி
பேசாமல் போன
ஒட்டுமொத்த கதைகளையும்
நீயே பேசினாய்..!
ஆண்டுகள் தாண்டி...
நினைவுகள் தோண்டி
அழுது அழவைத்தாய்..!
ஆண்டுகள் தாண்டி..
நம் நினைவுகள் தோண்டி..
உன் அழுகையிலும்
விடை வேண்டிய
வினாக்களிலும் - பின்னோக்கி
பிடித்திழுத்து சென்றாய்..!
மிக சில சமயங்களில்
மட்டுமே எனக்கு
கிட்டிய
கிட்டுகின்ற பாக்கியம்..!
கடந்த கால
நினைவுகள் செல்கையில்
இன்புற்று புன்முறுவல்
புரிந்த தருணம்.!!
அவ்வண்ணமே ஓர்
நினைவுப்பயணம்
செய்தமைக்கு நன்றி..!
என்னுள் மகிழ்ச்சி
கொய்தமைக்கு நன்றி..!
இயலாமையின் வலியில்
இயந்திர வாழ்வு போதும்..!
வழிகள் உன்னோடு தான்..!
செந்தூரம் ஏந்திய
என் நெற்றிக்கண் அறியும்
உன் விரல்களின் ஸ்பரிசமும்
உன் விழிகளின் பாசமும்
உன் இதயத்தின் நேசமும்...!
காதலியோடு செல்கையில்
கவலை ரேகைகள்
ஆட்கொண்டுவிடும்..!
சொந்தங்கள் சுற்றங்கள்
அறிந்திடாத காதல்...!
ஆகையின் யாரேனும்
கண்டிட நேரிடுமோ
என்று..!
நல்ல வேலை நட்பிற்கு
அந்த கவலை இல்லை..!
தோழி என்று உரக்க
சொல்வதில் என்னோடு
எப்போதும் ஓர் ஆனந்தம்..!
உன் திமிர் பேச்சுக்களும்..
எந்த விவாதத்திலும்
அடங்கி போயிடாத
உன் எதிர் பேச்சுக்களும்..!
அவ்வளவும் என்னால்
ரசிக்கப்பட்டவை..!
கவலை ரேகைகள்
யாவும் நேற்றோடு
களைந்திடு..!
உயிர் தோழி உருவம்
கொண்டவள்!
என்றும் நீ
தோள் சாய
ஓர் தோழன் உண்டுஎன்று உணர்ந்து அறிந்திடு..!
புன்னகை பூத்திடு..!
-நட்புடன்
இரா.செந்தில்குமார்.
No comments:
Post a Comment