Friday 6 May 2016

ஒற்றை காலணி


வழி நெடுகிலும் உன் பூம்பாதங்களின்
பாதுகாவலனாய் நான்

காதல் இலக்கணம் மீறி
தாலி கட்டிய
புதுபெண்ணாய்  இக்கணம் நீ.

இனி பூக்களோடு
பூபாளம் பாடட்டும் உன்
பூம்பாதங்கள்
உன் வழிகளில்!

மேடை அரங்கேறாத என் காதல்
ஜோடி இழந்த ஒற்றை காலணியாய்
உன் திருமண வீட்டின்
வாசலில்- நான்!

No comments:

Post a Comment