Monday 9 May 2016

நாணல்!!




வறண்டு போன என் பாலைவன வீதிகளில் 
நீர் கசிய காண்கிறேன் 
உன் அன்பில் அரவணைப்பில்!

விதிகள் பல வகுத்து நீள 
நேர்க்கோடிடுகிறாய்.....

வெள்ளத்தோடு வளையாத 
காட்டு மூங்கில் நானோ.. 
நாணல் போல் வளைகிறேன் 
உன் வளைவி சத்தத்திற்கே..!

மொத்த அன்பு திரட்டி  
பூப்பந்தென உருட்டி 
எறிகிறாய் என் மேல் - 
நொறுங்குகிறேன்  நான் 
நெருங்குகிறோம் நாம்!

குறைவே ஆயினும் நிறைவாய் இருப்பதாய் 
எண்ணி நிறுத்துகிறேன் இத்தோடு 
என் கவிதையை மட்டும்!

No comments:

Post a Comment