Thursday 12 May 2016

சோகத்தின் விடியல்கள்!!!


என் பாவம் செய்தேன்
ஏன் பாவமாய் ஆனேன்..
பாவம் தானே பாவையே நானும்!

பெருந்திரள் கூட்டி
கழைக்கூத்து ஆடி
விண்மீன் தொலைத்த வேடன்
நானும்!

முகமலர்ச்சி மனமகிழ்ச்சி
தொலைந்தே போன
நானும்!

நாளை வரும் துன்பங்களுக்கு
இன்றே அழுதல் தொடங்கிடும் மனதை
என் செய்வேன் நானும்!

விடியல் இல்லா ஒரு நல்
இரவு வேண்டியே
தினமும் நானும்!

சோகத்தின் விடியல்கள்
என் வாழ்வின் முடிவினில் தானோ!
பாவம் தானே பாவையே நானும்!

No comments:

Post a Comment