Friday 6 May 2016

ரேகை...


அழிந்தே போனதாய் எண்ணிய
இரு வேறு பாதை கொண்ட
உள்ளங்கை ரேகைகள்
வளர கனா கண்டேன்
வியந்து விழித்தேன்!

கல்யாண ரேகையோடு
ஆயுள் ரேகையும்
றெக்கை கட்டி  வளர்வதாய்
கனா கண்டேன்.
உறக்கம் தொலைத்தேன்!

மனதோடு புது ஆசையின்
ஓசையும் கேட்க கண்டேன்!

என்னில் பாதியாய் ஒரு பதி
தோள் சாயும் தோழியாய்
கை கோர்த்திடும் காதலாய்!
மனம் பேசும் வார்த்தைகளை
உதடுகளில் உச்சரிக்கும் உயிராய்!

ரயில் தண்டவாளத்தோடு
தனித்திருக்கும் ஒற்றை
பனை மர வாழ்வு போதுமே!
நல் துணை தேடும்
என் ரேகைகள் - உனை போலவே!

No comments:

Post a Comment