எதார்த்தம் மீறி
எத்தனித்த தருணங்கள்
எதிர்பார்த்து காத்திருந்த கணங்கள்!
ஏமாற்றங்களும் சோகங்களும்
ஏக்கங்களும் - ஒன்றிணைத்த
உணர்வுகளின் உந்துதலை
உதறி தள்ளிய என் வேகம்..
இருக்கைகள் இடையில்
இருகைகள்
இணைந்தாட -அனைத்தும்
மீறிய உன் பார்வையில்..
திமிறிய என் மனம்
சிக்கி சிறிதே தள்ளாடி
அணைந்து போகிறது
உன் அணைப்பில்!
No comments:
Post a Comment