யாரும் காணாத
பெருமழை ஒன்று
வர கண்டோம்
நீயும் நானும்!
காணும் நிலம் யாவும்
நீராகி போக - இரு கரையோடு
தூரம் ஆகிறோம்
கண் மறைகிறோம் !
என் வாசல் கதவோடு
ஆசை கதவு அடைக்க வழியின்றி
ஓடம் போல் தள்ளாடும் மனம்!!
நீரின் அலைகள் என் நாடிபார்க்க
நாடித்துடிப்போ காணமல் போக
நீள நீர் பெருவழியில்
நீந்தி வருகிறேன்
தண்ணீர் பாம்புகள் தாண்டி
உயிர் ஏந்தி வருகிறேன்
என் முகம் நீ காண!
வாடிய உன் முகமோ
பூந்தளிரென மலர
விடை தந்து வெளியேறி
கண்ணோரம் பெருமழை வென்னீரோடு
திரும்புகிறேன் மழை நீரோடு!
No comments:
Post a Comment