சமாதானங்கள் தோற்று
போன சம்மதங்கள்
உன் வார்த்தைகளில்
தெரிகிறது!
தோற்று போனது
உன் சமாதானங்களா
இல்லை நம் காதலா!
நம்மிடையில் வெற்றிடம்
தேடி - வெறுத்து
போன காற்று
இடையில் புக வழி அன்றி
தாண்டி செல்லும்!
இடைவேளை அற்ற
நம் பேச்சுகளில்
பாதைகளின் தூரங்கள்
தோற்று போகும்!
இன்றோ
தனியென கொண்ட நேரங்கள்
ஊமைகளாகி
போன இதயங்கள்
பேசாது விட்டு சென்ற
வார்த்தைகள்
நடைபாதையில் கேட்பாரற்று!
நடை பாதை நீளங்கள்
வலிகள் தருகிறது
இதயங்களோடு சேர்த்து
கால்களிலும்!
முடிவுகள்
சில நேரங்களில் பேசி
எடுக்கப்படும்
சில நேரங்களில் பேசாமல்
முடிந்துவிடும் வாழ் நாள் முழுதும்!
இக்கணம் உன் மனம்
என்னை வேண்டுதோ
இல்லை
என்ன வேண்டுதோ என
எண்ணிட தோணுது!
வெறுத்திடாமல்
பொறுத்து இருக்கிறேன்!
No comments:
Post a Comment