நெருக்கம் கூடி
நெஞ்சம் தேடிய நின்
பார்வைகள்
அறிவோம் யாமிருவரும்..!
நிற்கின்ற இடம்தனின்
நிரந்தரம் புரியாமல்
காற்றும் கூட வித்தியாசம்
காட்டுகிறது!
சுற்றம் மறைத்து
சூழல்கள் மறந்து
நாமாய் நம்மை சுற்றிய
நிமிடங்கள்!
என் எல்லைகள்
தாண்டிய
விபரம் அறிகிறேன்
உன் வார்த்தை தீண்டல்களில்!
நெருடல் கூடி உயிர்
நடுங்க நானும்
நீயும் பேசினோம்
தனித்தனியே!
முன்னின்று நான் நிற்க
திரும்பிய திசைகளில்
புரிகிறது என் நிலைமை!
பரிகாசம் கூறும் பார்வைகள்
மத்தியில் கூனி
குறுகலானேன்!
சுற்றார் பார்வைகளில்
ஏளனம் கண்டு
ஏமாற்றம் கொண்டேன்
ஏன் மாற்றம் கொண்டேன்!
அடி முன்னெடுக்க
ஆயிரம் யோசனைகள்
என்னோடே!
கண்டால் தானே சோகம்
கேட்டால் தானே கோவம்
உரையாடினால் தானே
உதாசீனங்கள்!!
சிறிதே ஆயினும்
மறந்தா போய்விடும்
நாம் சிரித்து மகிழ்ந்த
அணைத்து நெகிழ்ந்த
நினைவுகள்!
உன் அவன் காணாமல் போனான்
என் அவள் தொலைந்து போனால்!
இனி
அழுகைகள் இருவரோடும்
இரு நெஞ்சின் வேரோடும்!
நெஞ்சம் தேடிய நின்
பார்வைகள்
அறிவோம் யாமிருவரும்..!
நிற்கின்ற இடம்தனின்
நிரந்தரம் புரியாமல்
காற்றும் கூட வித்தியாசம்
காட்டுகிறது!
சுற்றம் மறைத்து
சூழல்கள் மறந்து
நாமாய் நம்மை சுற்றிய
நிமிடங்கள்!
என் எல்லைகள்
தாண்டிய
விபரம் அறிகிறேன்
உன் வார்த்தை தீண்டல்களில்!
நெருடல் கூடி உயிர்
நடுங்க நானும்
நீயும் பேசினோம்
தனித்தனியே!
முன்னின்று நான் நிற்க
திரும்பிய திசைகளில்
புரிகிறது என் நிலைமை!
பரிகாசம் கூறும் பார்வைகள்
மத்தியில் கூனி
குறுகலானேன்!
சுற்றார் பார்வைகளில்
ஏளனம் கண்டு
ஏமாற்றம் கொண்டேன்
ஏன் மாற்றம் கொண்டேன்!
அடி முன்னெடுக்க
ஆயிரம் யோசனைகள்
என்னோடே!
கண்டால் தானே சோகம்
கேட்டால் தானே கோவம்
உரையாடினால் தானே
உதாசீனங்கள்!!
சிறிதே ஆயினும்
மறந்தா போய்விடும்
நாம் சிரித்து மகிழ்ந்த
அணைத்து நெகிழ்ந்த
நினைவுகள்!
உன் அவன் காணாமல் போனான்
என் அவள் தொலைந்து போனால்!
இனி
அழுகைகள் இருவரோடும்
இரு நெஞ்சின் வேரோடும்!
No comments:
Post a Comment