நீ அந்நியமாகி போய்விட்ட
ஒரு நாளில்
ஏதோ தேடி அலைந்திட்ட
என் கண்ணில்
சிக்குகிறது
உன் புகைப்படம்!
புகைப்படத்திற்க்கான சிரிப்பின்
அளவு தாண்டிய
உன் சிரிப்பு - காட்டுகிறது
நம் காதலையும்!
காதலின் இருமாப்பில்
முடிவு செய்திருந்தோம்
நம் திருமணத்தன்று தான்
முதலில் ஜோடியாய்
புகைப்படம் எடுப்பதென்று!
ஊடுருவி பார்க்கையில்
கண்ணாடி பிம்பங்களின்
தயவில் - என் பிம்பங்களும்
உன்னருகில் விழுந்திருக்கும்
விபரம் கண்டு
விஷமச் சிரிப்பு கொண்டோம்!
அன்றேனும்
உணர்ந்திருக்க வேண்டும்
உன் வாழ்வில் நிழல்
என மட்டுமே
வருவேன் என்று!
ஆண்டுகள் ஓடி
துணை ஏதுமின்றி
வாழும் என்னை பார்த்து
விஷம சிரிப்பு
சிரிக்கும் உன் புகைப்படம்
விபரம் ஏதும் அறியாமல் நான்!!
No comments:
Post a Comment