Monday 18 July 2016

பெண்ணினமே..!

இது போதுமா?
இது போதுமே
இன்னும் வேணுமா?
இன்னும் பட்டாலும் திருந்தா
என் மனமே..

வேண்டாம் நீ
என்று கூறிய வார்த்தை
உன் வாயிலாக..
வாயில் அதுவாக
செல்கிறேன் நான்
உன் வாழ் விட்டு..!

போதுமே இதுவும்
இதற்கு மேல் என்ன
வேண்டிடும் என் மனமே

பட்டது போதும்
பாச பட்டினி வாழ்வு
தான் இனி தினமே...

உன் பார்வைகள் அற்ற
வார்த்தைகள் சுட்ட
வாழ்வு தான்
இனி எனதே..!

பட்டவை யாவும்
கற்றவை தானே
இன்னும் திருந்தா ஜென்மமே...!

இச்ஜென்மமும் போதுமே
இந்த வாழ்வும் போதுமே
பெண்ணினமே என் வாழ்வில்
இனி வேண்டாமே..!

நீயும் கூட பிரிவாய்
என புரியா
என் மனமே..

பட்டாலும் சுட்டாலும்
திருந்தா உயிரே
உயிர் பிரியட்டும்
நம் நினைவோடே!

No comments:

Post a Comment