என் தினசரிகளின்
தொடக்கங்களும் முடிவுகளும்
உன் குரலோடும்..
சில நேரங்களின்
விழியோடுமாய்..
இன்பங்கள் சுமந்த என்
பசுமை நாட்கள்!!
குரல் கேட்டு
விழி கண்டு
உயிர் தீண்டி
மாதங்கள் ஓடிற்று...
அதிக நேரங்களில்
என் தனிமையில்
உன் புகைப்படங்கள்
பார்த்து பார்த்து
குரலொலி காதுகளோடு
நானும் அசை போடுகிறேன்...
நாளை கண்விழிக்கையில்
இவை யாவும்
கனவாக - நீ என் அருகே
இருந்திட கூடாதோ
என்றெண்ணாத நேரங்கள்
இல்லை!
அநேக நேரங்கள் இல்லாமல்
போயினும்
எப்போதேனும் நீயும்
என் போல்
எண்ணியதுண்டோ!
என் புன்னகை வேண்டி
பொய்யுரைத்திடாதே!!
மற்றோர் ஏமாற்றம்
தாங்கி என் உயிர்
தங்கிடாது!
உன் பிரிவின் துயரமே
போதும் என் உயிர்
பிரிய!!!
தொடக்கங்களும் முடிவுகளும்
உன் குரலோடும்..
சில நேரங்களின்
விழியோடுமாய்..
இன்பங்கள் சுமந்த என்
பசுமை நாட்கள்!!
குரல் கேட்டு
விழி கண்டு
உயிர் தீண்டி
மாதங்கள் ஓடிற்று...
அதிக நேரங்களில்
என் தனிமையில்
உன் புகைப்படங்கள்
பார்த்து பார்த்து
குரலொலி காதுகளோடு
நானும் அசை போடுகிறேன்...
நாளை கண்விழிக்கையில்
இவை யாவும்
கனவாக - நீ என் அருகே
இருந்திட கூடாதோ
என்றெண்ணாத நேரங்கள்
இல்லை!
அநேக நேரங்கள் இல்லாமல்
போயினும்
எப்போதேனும் நீயும்
என் போல்
எண்ணியதுண்டோ!
என் புன்னகை வேண்டி
பொய்யுரைத்திடாதே!!
மற்றோர் ஏமாற்றம்
தாங்கி என் உயிர்
தங்கிடாது!
உன் பிரிவின் துயரமே
போதும் என் உயிர்
பிரிய!!!
No comments:
Post a Comment