Thursday 21 July 2016

அடுத்த விடியலுக்குள்!!

மாறியாகத்தான் 
வேண்டும் நான்
இந்த நொடியில்..!

ஏன்?
யாருக்காக?
அடுத்த விடியலுக்குள் 
இது சாத்தியமா?

ஆனாலும் அந்த 
புதிய விடியலின் 
கிழக்கு பொழுதுகள் 
வெண்கதிர்களால் வெண்சாமரம் 
கொண்டு இயற்கையை 
தாலாட்ட துவங்கும்முன்

என்னுள் உள்ளவையெல்லாம் 
அறுத்தெறியவேண்டும்!

எச்சில் இலையாய் 
என்னை சுமந்து வந்து
இங்கே கொட்டியது யார்!

அறிவேன் நானும்
நான் மட்டுமே மூலகாரணம் 
என்று!

என் காதல் மட்டுமே 
எல்லா ரணங்களுக்கும்
ஆகா பெரும் தொடக்கம்!!
நானும் குழந்தைதானே 
உன் மடியில்!!

மாறியாகத்தான் 
வேண்டும் நான்.
அடுத்த விடியலுக்குள்!!

No comments:

Post a Comment