முகமூடிகள் ஏதுமின்றி
வாழ்ந்திடத்தான்
நானும் விரும்பினேன்!
கொத்தி தின்னும்
சர்ப்பமொத்த கண்களின்
வீரிய விஷத்தினில்
நானும் தான் செயலிலந்தேன்!
அன்று உன்னோடு
கூடி நின்று
நாம் சிரித்த நிகழ்வுகள்
நினைக்கையில்
இமைகளின் படபடப்பில்
சட்டென கண் முன் வந்து
நின்றுசிரிக்கும்
இன்றைய நிஜம்!
கொன்று தின்னட்டும்
என்னின் மிச்சத்தையும் -
என் இயலாமை!
போதும் இந்த முகமூடி வாழ்வு
உனை தொலைத்த என்
முகமூடி வாழ்வு!!
No comments:
Post a Comment