சொல்லாத மன
ஆசைகள்
உன் செயலோடு
நான் காண!
நேற்றைய சோகங்கள்
மறந்த, மறைந்த
பட்டாம்பூச்சி சிறகுகள்
நம் மனதோடு!
சிரிப்புகளுக்கு சற்று
இடையே சிறிய வேளையில்
சிறிதே நாம் பேசினோம்!!
ஆயினும்
அதுவே ஆகபெரும்
சிறந்த சந்திப்பு
இன்று மட்டிலும் - மனதோடு!
கவிதை - கைவந்த கலை தான்!
ஆயினும் ஆனந்த உச்சத்தில்
உதறல்கள் என்னோடு..
கட்டு குழையாமல்
வந்திருப்பதாய் மகிழ்கிறேன்
சந்திப்பின் நினைவுகளோடு!
No comments:
Post a Comment