Tuesday 14 June 2016

பட்டாம்பூச்சி சிறகுகள்..!


சொல்லாத மன 
ஆசைகள் 
உன் செயலோடு
நான் காண!

நேற்றைய சோகங்கள் 
மறந்த, மறைந்த 
பட்டாம்பூச்சி சிறகுகள் 
நம் மனதோடு!

சிரிப்புகளுக்கு சற்று
இடையே சிறிய வேளையில்  
சிறிதே நாம் பேசினோம்!!

ஆயினும் 
அதுவே ஆகபெரும் 
சிறந்த சந்திப்பு
இன்று மட்டிலும் - மனதோடு!

கவிதை - கைவந்த கலை தான்!
ஆயினும் ஆனந்த உச்சத்தில் 
உதறல்கள் என்னோடு.. 

கட்டு குழையாமல் 
வந்திருப்பதாய் மகிழ்கிறேன்
சந்திப்பின் நினைவுகளோடு!

No comments:

Post a Comment