உன் தோள் சாய்ந்திட
உயிர் தேடுது
என் மனம்!!
பாசம் வேண்டி
நடுங்குது என் உயிர்!
கொஞ்சம் உன்னை
கடன் வாங்கி
நானும் தான்
உன் மடி தூங்கனும்
கண்ணீர் கடல்
கரை தெரியும் தூரம் வரை
நானும் தான் அழுதிடனும்
சோகம் கரையனும்..
உன் பிரிவின் சோகம்
மட்டும் கொண்டு
பிரியனும்!
பாலுக்கு அழும்
பச்சிளம் குழந்தையென
யாருமற்ற அனாதையாய்
நானும் தான் ஆனேனோ
இதுவும் கடவுளின் செயல் தானோ!!
No comments:
Post a Comment