Wednesday 22 June 2016

கேளா யாசகம்...!


கேளா யாசகம் 
நானும் கொண்டு 
கொண்டேன் பெருந்துயரம் 
என்னோடு...! 

என்பால் சோகம் யாவும் 
பெண்பால் பாசம் கொண்டு 
என்பாள்  அவள்! 

அவளோடு நான் கண்ட
காதல் மாளிகை 
இன்று கனவு நாழிகைகளாய்..!

ஆண்பால் நானோ
அன்பால் இன்று  
அஃறிணை ஆகும் 
நாள் நோக்கி 
நிறைவு பயணம் 
நிறைவேறா ஆசைகளோடு..!

No comments:

Post a Comment