Friday 10 June 2016

இது போதுமா உனக்கு!!


மனமே என் மனமே உடையாதிரு..
உயிரே என் உயிரே உறையாதிறு..
உறவே இவ்வுறவே உதிராதிரு...!

உருட்டி மிரட்டி
உயிர் ஒன்றென திரட்டி
உன் கருவிழியோடு எரிகிறேன்!
காண கரைகிறேன்
உன் கண் மறைகிறேன்..!

இது போதுமா உனக்கு -
என நீ கெஞ்சுவதாக..!
போதுமா இது உனக்கு- என
மனம் என்னை நகைப்பதாக..!
ஒற்றை வாக்கியம்
செருக்குடன் சுழல்கிறது
செவிகளோடு!!

தலை இலை வாழையில்
தெளித்திடும் நீரென..
விழியோரத்து நீர் என்
உதடுகளில் உருண்டோடுகிறது
உதிரமனவே!!

புன்னகையில் கண்ணீர்
புதைத்து பிரிந்து வருகிறேன்!!

நடைதூர பயணம்...
நகர்வதாய் சொல்லும் என் கால்கள்
நகராமல் நீளும் பாதைகள்
முன்னோக்கி நான் நகர
பின்னோக்கி இழுக்கிறது -
நம் நினைவுகள்!!

விழி பார்க்க விரும்பிய வேளையில்..
மதி பேச்சில் தோற்று
தொடர்கிறேன் என் திசையில்
வெண்மதி உனை பிரிகிறேன்!!

No comments:

Post a Comment