என் செய்வேன் நானும்
நம் காதல் மறவா
என் வீட்டு
நிலைக்கண்ணாடியை..
இன்று மட்டிலும்
என் முகம் காட்ட மறந்து!
ஒன்றெனவே இருவரும்
இணைந்து
பொருத்தம் பார்த்து மகிழ்ந்த
நொடிகள் காட்டும்..!
நம் காதல் மறவா
என் வீட்டு நிலைக்கண்ணாடியை
என் செய்வேன் நானும்!!
பாதரச கரைசலில்
அதனின் கண்ணீர்
காண்கிறேன்
நம் முகங்கள் காணாது!
No comments:
Post a Comment